முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, September 28, 2010

ஒரு தகவல்



பரமார்த்தகுரு ஜி (PJ)
யின் வனவாசம் பற்றிய இரண்டாம் பின்னணி நீண்ட விமர்சனமாக வெளி வர இருக்கின்றது. அது மிக விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வனவாசத்தின் இரண்டாவது காரணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய தகவல்.


PJ காபிரான தருணங்கள்:

இந்த விவாதத்தில் சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் நிலைப்பாடானது, தமிழ் நாடு (போலி) தவ்ஹீத் ஜமாஅத் இணைவைப்பிற்கும், பித்'அத்திற்கும் சொந்தக்காரர்கள் என்று தான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் என்ன நடந்தது. இணைவைப்பிற்கும், பித்'அத்திற்கும் சொந்தக்காரர்கள் என்பதற்கும் மேலாக காபிராக மாறி போனார்கள். ஜூலை 24 காலை அமர்வினுடைய கடைசி அமர்வில், சூரியன் உச்சியில் இருக்கும் 12 மணி கடந்த 37 வது நிமிடத்தில்

அதாவது (12:36:36) மணியில்

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மார்கத்தில் தப்பு தப்பாக முடிவெடுத்து (நவூது பில்லாஹ்) மாறினார்கள்

என்று கூறி தான் ஒரு பக்கா காபிர் என்று கூறிவிட்டார்.

யார் இந்த மார்க்கத்தை கொண்டு வந்தார்களோ, , யார் அல்லாஹ்வை காட்டினார்களோ, யார் குர்'ஆனை தந்தார்களோ, அந்த நபியை, கேவலப்படுத்தி, கண்ணியம் குறைத்து, நம்மை போன்ற மனிதர் தான் என்பதை எல்லாம் தாண்டி, தப்பு தப்பாக பேசினார்கள் (நவூது பில்லாஹ், அல்லாஹ் இவர்களின் தீங்கில் இருந்து நம்மையும், நம் சந்ததியினரையும், வருங்கால சந்ததியினரையும், தற்போது சுன்னத் வல் ஜமாஅத் ல் இருப்பவர்களையும், என்றென்றும் காப்பாற்றுவானாக) இப்படி தான் அல்லாஹ் தனது நபி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களை காபிர் ஆக்கி அல்லாஹ் நரகத்தில் தள்ளுவான்.




PJ ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் வீடியோ

மேலும் அதே உரையின் கடைசியில் நாங்கள் (PJ கூட்டம்) கப்ர் வணங்கி கொண்டு இருந்தோம் என்று ஒத்துக்கொண்டார் (ஆனால் நாம் கப்ர் ஐ வணங்க வில்லை, அல்லாஹ் வை தான் வணங்குகின்றோம்). தன் மூலமும் இவர் காபிர் என்று காட்டிக்கொண்டார். மேல் உள்ள வீடியோவில் பதியப்பட்டுள்ளது.

கெஞ்சும் PJ:

குர்'ஆன் ஹதீஸ் படி விவாதம் செய்வதில் தோற்றுப்போன PJ, நெஞ்சில் கையை வைத்து (நீங்களும் எங்கள் பக்கம் வாருங்கள்) என்று அழைப்பு விடுத்து கெஞ்ச ஆரம்பித்து விட்டார். இந்த விஷயத்தையும் மேல் உள்ள வீடியோ வில் பார்த்துகொள்ளுங்கள்.

மதுரை நாபிஈ.

Saturday, September 18, 2010

இமாம் ஷாதுலி ரழி... அவர்களின் உரூஸ்



தரீகா என்ற சொல்லிற்கு "வழி" அல்லது பாதை என்பது பொருள். இது என்ன பாதை அல்லது வழி என்று சிலர் கேட்கலாம். அல்லாஹ்வை அடைய வைக்கும் ஒரு பாதை அல்லது வழி என்ற பொருளால் தரீகா என்று பெயர் பெற்றது.

உலகில் பல தரீகாக்கள் உள்ளன. அதில் உலகளாவிய தரீகா ஷாதுலியா தரீகா தான். ஆங்கில எழுத்தாளர் ஹிட்டி என்பார் கூறும் போது, "The Largest Brother Hood in the World is Shadhuliya Brother Hood" அதாவது, உலகில் மிகப்பெரிய சகோதரத்துவம் என்பது ஷாதுலியா வின் கட்டமைப்பு என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு தரீகா விற்கும் ஒவ்வொரு வழிமுறைகள் உள்ளன. ஆனால் சேரும் இடம் அல்லாஹ் தான். ஷாதுலியா என்பது உலகத்தில் உள்ள பெரிய தரீகா வாகும். இந்த தரீகா வின் ஸ்தாபகர் ஹழ்ரத் ஷைக் இமாம் நூருத்தீன் அபுல்ஹசன் அலி அஷ் ஷாதுலி ஆகும். இமாம் அவர்களின் இயற் பெயர் அலி என்பதாகும். புனைபெயர் அபுல் ஹசன் என்பதாகும். இவர்கள் குதுபாக உச்ச கட்டத்தில் இருக்கும் போது, அல்லாஹ் இவர்களை நோக்கி," انت شاذ لي " நீர் எம்மிடம் மிகவும் நெருக்கமான இடத்தில் உள்ளீர் என்று கூறினான். அதுவே ஷாதுலி என்று மருவி நிலைத்துவிட்டது.

ஷாதுலியா தரீகா தரீகுஷ் ஷுக்ர் (நன்றிக்கான தரீகா) என்று அழைக்கப்படும். காரணம் ஏனைய தரீகாக்கள் பழைய ஆடைகள் அணியவும், மனக்கட்டுப்பாடு விதித்து மனம் விரும்பியதை தடுத்து கொள்ளவும் அறிவுறுத்துகின்றன. ஷாதுலியா தரீகா என்பது கீழ் கண்ட வசனத்தின் மூலம் தரீகாவை அமைத்துள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

விசுவாசிகளே, உங்களுக்கு ஆகுமாக்கியவைகளை உண்ணுங்கள், மேலும் நீங்கள் அவனை வணங்குவதின் மூலம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள். என்ற வசனத்தின் அடிப்படையில் ஹலாலான எல்லாவற்றையும் உண்ணலாம் (தேவைக்கு ஏற்ப) ஆனால் நன்றி செலுத்த கூடிய அடியாராக மாற நன்றியோடு வணங்க வேண்டும்.

நாயகக்கண்மணி நபிகள் நாயகம் ஸல்... அவர்களும் இப்படி தான் வழி காட்டி யுள்ளார்கள். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் தினமும் கால் வீங்கும் அளவிற்கு நின்று இரவில் வணங்குவார்கள் (வஹ்ஹாபிகள் அதிக்கப்படியான இபாதத் இல்லை என்று சொல்லி கொண்டு திரிகின்றார்கள் நபி வழியை பின் பற்றாதவர்கள்). ஹழ்ரத் ஆயிஷா சித்தீகா ரழி... யா ரசூலுல்லாஹ் (நாம் யா ரசூலல்லாஹ் என்று அழைத்தால் ஷிர்க் என்று சொல்லி கொண்டு திரிகின்றார்கள்) உங்களை தான் அல்லாஹ் முன் பின் பாவங்கள் மன்னித்து விட்டானே, எதற்கு கால் கடுக்கும் அளவிற்கு நின்று தொழுகையில் நிற்கின்றீர்கள் என கேட்கும் போது.
يا عائشة افلا ان اكون عبدا شكورا

ஆயிஷாவே (யா ஆயிஷா என்று நபிகளார் ஸல்... அவர்களும் அழைத்துள்ளார்கள்) நன்றியுள்ள ஒரு அடியானாக நான் மாற வேண்டாமா என்று கூறினார்கள். ஒரு நல்ல அடியானாக மாற வேண்டுமானால் கடமையான வணக்கங்களின் மூலம் நிச்சயமாக முடியாது. அதிகப்படியான அமல்கள் இருந்தால் தான் அது முடியும். இன்றைக்கு வயிற்று பிழைப்பை நடத்தும் இவ் வஹ்ஹாபிகள் அதிகப்படியான அமல்களை நாம் செய்தால் பித்'அத் என்று கூறுகின்றார்கள். இது நம்மை பார்த்து கூறவில்லை. நபிகளார் ஸல்... அவர்களை பார்த்து கூறுகின்றார்கள். காரணம் அல்லாஹ்வின் தூதர் நபிகள் ஸல்... அவர்கள் காட்டி தந்த வழிமுறை தான் அதிகப்படியான வணக்கம் என்பது.

இப்படி பட்ட வணக்கங்கள் செய்வதற்காக தான் தரீகாக்கள் உருவாக்கப்பட்டன. ஜிக்ர்கள் செய்வது, ஒளராத்கள் ஓதுவது, ஹிஸ்ப்கள் ஓதுவது. காலை மாலை விர்து எனப்படும் சலவாத்துக்கள், பாவ மன்னிப்புக்கள், கோருவது எல்லாம் நடக்கின்றது. மேலும் ஹிஸ்புல் பஹர் என்னும் ஹிஸ்ப் உலக முஸ்லிம்களுக்கு பொதுவாக ஷாதுலி இமாம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. மங்கோலியர்கள் பாக்தாத் மாநகரத்தை சின்னா பின்னப்படுத்திய போது ஷாதுலி நாயகம் கூறினார்கள். யாரேனும் ஒருவர் பக்தாத்தில் ஹிஸ்புல் பஹர் ஓதுபவர் இருந்து இருந்தால் பாக்தாத் பாதுகாப்பு பெற்று இருக்கும் என்றார்கள். (அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று நாம் வலிமார்களுக்கு மரியாதை செய்தாலே வணங்காதீர்கள், ஷிர்க் இது என்று சொல்லி கொண்டு திரியும் இந்த வஹ்ஹாபிகள் ஏன் நாம் அல்லாஹ்விற்கு செய்யும் அமல்களையும் பித்'அத் என்று கூறி, தடுத்து நிறுத்த பார்கின்றார்கள். அல்லாஹ்விற்கு வணக்கம் செய்தாலும் பித்'அத் என்றால் பின்னர் யாருக்கு தான் வணக்கம் செய்ய வேண்டும்? இவர்களின் சுய ரூபத்தை கண்டு கொள்ளுங்கள். இவர்கள் யூத, கிறிஸ்தவர்களின் கைகூலிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.)

மேலும் அதிக தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஷாதுலி இமாம் அவர்களின் உரூஸ் தினம் தமிழகத்தில் பல ஊர்களில் கொண்டாடப்படுகிறது. மதுரையில் வருகின்ற 20-09-2010 திங்கள் கிழமை இரவு விடிந்தால் செவ்வாய்கிழமை நடைபெற இருக்கின்றது. அதற்கான தகவலும் http://www.shazuli.com இல் பதியப்பட்டுள்ளது. மேலும் 25-09-2010 ஞாயிற்றுக்கிழமை விடிந்தால் திங்கள் கிழமை திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் என்னும் ஊரிலும் கொண்டாடப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மதுரை நாபிஈ


Tuesday, September 14, 2010

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மட்டுமா சுபுஹான மௌலித்


மௌலித் என்றால் என்ன:



மவ்லித் என்ற சொல்லுக்கு அரபு மொழியில் பிறப்பு என்று பொருளாகும். இஸ்லாமியர்களின் வழக்கில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறப்பு மற்றும் சிறப்புகளை கவிநடையில் புகழ்வதற்கு மவ்லித் என்று கூறப்படும்.
ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கு பள்ளிவாசல் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள்.அதிலே அவர் ஏறி நின்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே புகழ்வார்கள்.

அறிவிப்பாளர் :ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா

நூல் :திர்மிதி எண் :2773

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிராத்தனை செய்து கவி படித்தார்கள் :


اللهم ان العيش عيش الآخرة فاغفر للانصار والمهاجرة
اللهم انه لاخير الا خير الآخرة فبارك فى الانصار والمهاجرة
اللهم لا عيش الا عيشالآخرة فاكرم الانصار والمهاجرة
اللهم ان الاجر اجر الآخرة فارحم الانصار والمهاجرة


திண்ணமாக,வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக! நிச்சியமாக மறுமை நலனைத்தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக! உறுதியாக மறுமை வாழ்வைத்தவிர வேறு எந்த வாழ்வுமில்லை. இறைவனே! அன்ஸார்- முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு

நூல் : புகாரீ: 2622,2623,2741,3616

இப்படி ஏராளமான விஷயங்களை மௌலித் ஓதலாம் என்பதற்கு கூறிக்கொண்டே போகலாம். ஆனாலும் இங்கு சில விஷயங்களை மட்டுமே எடுத்து காட்டி உள்ளோம். அதற்கு காரணங்கள் பின்னால் வரும்.

இந்த உலகத்தில் பூமியில் குழப்பம் பண்ணும் ஆசாமிகள் சுபுஹான மவ்லித் என்பது கேரளாவிலும், தமிழகத்திலும் மட்டுமே இருக்கின்றது. ஒரு வழிபாடாக இருந்தால் உலகம் முழுதும் இருக்குமே! ஆனால் இல்லையே என்று கூறுகின்றார்கள், அதை களியக்காவிளையிலும் கூறினார்கள். என்ன செய்வது? அல்லாஹ் இவர்களை பற்றி குர்'ஆனில்

ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم

அதாவது, அல்லாஹ் அவர்களின் இதயத்திலும், அவர்களின் செவிகளிலும், அவர்களின் பார்வைகளிலும் முத்திரை இட்டுவிட்டான் என்று கூறுகிறான்.

அதனால் இவர்களின் பார்வைக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் பாருங்கள், இந்த பரிசுத்தமான என்ற பொருளை உள்ளடக்கிய மௌலிதான சுபுஹான மௌலித் உலகத்தில் பல இடங்களில் ஓதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த புகழ்களின் மூலம் சுன்னத் வல் ஜமாஅத் ஐ சார்ந்தவர்களுக்கு சுவனமும், வஹ்ஹாபிகளுக்கு நரகமும் எழுதப்பட்டு கொண்டு இருக்கின்றது. ஓதப்படும் ஊர்கள் அனைத்தையும் இங்கே காட்ட முடியாத ஒரு நிலை. காரணம் பார்வையாளர்களின் நேரம் கருதி.

இங்கு இந்த பூமியில் குழப்பம் பண்ணும் ஆசாமிகள் எந்த ஒரு காரணமும் சொல்ல முடியாத, அதாவது இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தான் கற்று கொடுத்தார்கள், அல்லது இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தான் ஓதினார்கள் (என்று களியக்காவிளையில் சப்பை கட்டு கட்டியதை போல கட்டவும் முடியாமல்) என்று சொல்லவே முடியாத ஒரு நாடான இந்தோனேசியாவில் ஓதிய சுபுஹான மௌலித், மற்றும் புர்தா ஷரீப் உடைய பகுதியை பாருங்கள்.




நாம் ஓதும் சலாம் பைத் யிலிருந்து ஒரு பகுதி






நாம் ஓதும் யா நபி சலாம் அலைக்கும் பைத் யிலிருந்து ஒரு பகுதி







நாம் ஓதும் புர்தா ஷரீப் யிலிருந்து ஒரு பகுதி



இப்படி ஏராளமான பகுதியில் ஒதப்பட்டதும் இருக்கின்றது. இதில் எந்த சப்பைகட்டும் கட்ட முடியாது. இது பக்கா இந்தோனேசியாவை சேர்ந்தவர்களாலே ஓதப்பட்டது. மேலும் النبي صلو عليك பைத் பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் வீடியோ க்கள் உள்ளன. நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் புனித மக்க மாநகரை விட்டு மதீன மாநகருக்கு வரும் போது ஓதப்பட்ட

طلع البدر علينا من ثنيات الوداع
وجب الشكر علينا مادعى لله داعي



அதாவது, தனியதுல் விதா' என்னும் இடத்தில் இருந்து பௌர்ணமி நிலவு எங்களிடையே உதயமானது,

எங்கள் து'ஆ வை ஏற்றுக் கொண்ட அந்த அல்லாஹ் வை நன்றி செலுத்துவது எங்கள் மீது வாஜிப் ஆகும்

என்ற தொடர் மௌலித் மதீனத்து சிறுவர்களால் ஓதப்பட்டு, அது நபிகள் நாயகம் ஸல்... அவர்களால் புன்முறுவல் பூத்தபடி ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த மௌலித் இன்றைய சவுதி வஹ்ஹாபி அரசாங்கத்தாலேயே சிறுவர்களை வைத்து ஓதப்பட்டு CD யாக வெளியிடப்பட்டு வருகிறது. உலகத்தில் சவுதி உட்பட எல்லா நாட்டிலும் ஏதாவது ஒரு மௌலித் இருந்து கொண்டு தான்இருக்கிறது.

இப்படி நாம் சொன்னால் ம்ஹும்... அவர்கள் செய்தாலும் தப்பு தப்பு தான் என்று இப்படி திரும்பி விடுவார்கள் இந்த வஹ்ஹாபிய புரோகிதர்கள். காரணம் குதிரை முன்னால் போனால் கடிக்கும், பின்னால் வந்தால் உதைக்கும், அப்படித்தான் இவர்களும். மவ்லித் ஓதுவதை நிறுத்தவேண்டும் முடிவெடுத்துவிட்டு, அதற்கேற்றாற்போல் அறிவிற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

நாம் ஏன் மவ்லித் ஓதுகிறோம்:

எத்தனையோ சஹாபாக்கள் மவ்லித் ஓதி இருந்தாலும், மேலே கூறப்பட்ட ஹதீஸ்களும் சரி, கீழே வர இருக்கும் சஹாபா பெருமக்கள் படித்த மவ்லிதும் சரி வஹ்ஹாபிகளும் திருந்த வேண்டும் என்ற நோக்கில் தான் காட்டப்பட்டுள்ளது. அதனால் தான் ஹழ்ரத் ஆயிஷா சித்தீகா ரழி... அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸ், மற்றும் கவிதை, சித்தீகுல் அக்பர் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரழி... மற்றும் ஹழ்ரத் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரழி.... சம்பந்தப்பட்ட ஹதீஸ், மற்றும் கவிதை மட்டுமே குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.

காரணம் அல்லாஹ் குர்'ஆனில்

النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ

நபிகள் ஸல்.... அவர்கள் மூமின்களுக்கு அவர்களின் உயிரைவிட மேலானவர்கள், அவர்களின் மனைவிமார்கள் அவர்களுக்கு தாய் மார்கள் என்று கூறுகிறான், அதனால் ஹழ்ரத் ஆயிஷா சித்திக்கா ரழி.... பற்றியதும், நாயக கண்மணி நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள்

عليكم بسنتي وسنة الخلفاء الراشدين

என்னுடைய மற்றும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் சுன்னத்தை பின்பற்றுங்கள் என்று கூறி உள்ளார்கள், அதனால் சித்தீகுல் அக்பர் ரழி... பற்றியதும், நபிகளார் ஸல்... அவர்கள் யா அல்லாஹ் روح القدس ஐ கொண்டு உதவி கொடு என்று யாருக்காக துஆ செய்தார்களோ அப்படி பட்ட ஹழ்ரத் ஹஸ்ஸான் ரழி... பற்றியது மட்டும்கொடுக்கின்றோம்.

ஹழ்ரத் ஆயிஷா ரழி... அவர்கள் படித்தார்கள், உலகத்திலும் சூரியன் இருக்கின்றது, எங்களிடமும் சூரியன் (நபிகள் நாயகம்) இருக்கின்றது. வானின் சூரியனை விட எனது சூரியன் சிறப்பானதாகும்.

شمس الناس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء

மனிதர்களின் சூரியன் காலையில் தான் உதயமாகும், எனது சூரியன் இஷா விற்கு பிறகும் உதயமாகித்தான் இருக்கின்றது. ஹழ்ரத் சித்தீகுல் அக்பர் ரழி... அவர்கள் படித்தார்கள்,


رأيت الهلال و وجه الحبيبي فصار هلالين عند النظر
فهذا يغيب وهذا حضر وليس المغيب كمن قد حضر

அதாவது, நான் சந்திரனையும் பார்கின்றேன், எனது ஹபீபின் முகத்தையும் பார்க்கின்றேன். இரு சந்திரன்களும் எனது பார்வையில் இருக்கின்றன. இந்த (வானின்) சந்திரன் மறைந்து விட்டது, இந்த (நபிகள் ஸல்...) சந்திரன் மறையவில்லை, இந்த சூரியன் மறையவே மறையாது.

ஹஸ்ஸான் ரழி... அவர்கள் படித்தார்கள்,

خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء
واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء

(யா ரசூலுல்லாஹ்....) தாங்கள் எப்பிடி விரும்பினீர்களோ அப்படி, எல்லா குறைகளை விட்டும் நீக்கப்பட்டு படைக்கப்பட்டுள்ளீர்கள். தங்களை போல ஒரு அழகை என் கண் பார்த்ததில்லை, உங்களை போன்ற ஒரு அழகானவரை எந்த தாயும் பெற்றெடுக்கவில்லை.

நபிகாளார் காட்டித்தந்த, சஹாபா பெருமக்கள் ஸல்.... அவர்களுக்கு முன்னாலே பின்பற்றி காட்டிய இப்படிப்பட்ட மௌலிதை நாம் ஓதி வந்தால் சிலருக்கு கீழிருந்து மேல் வரை பற்றிக்கொண்டு எரியும். நபிகளார் ஸல்... அவர்களை புகழ்ந்தால்தான் ஈமானே இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது.


மேலும் அபூ ஜஹ்ல் போன்றவர்களின் வழியை தேர்ந்தெடுத்ததால் (அல்லாஹ்வை மட்டும் நம்பிக்கை கொண்டு, நபிகளார் ஸல்... அவர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது) இவர்களுக்கு பற்றி எறியும். அதனால் தான் இவர்கள் (பிஸ்மில்லாஹ், குர்'ஆன் வசனங்கள், ஹிகாயத்தில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸ் உள்ளடங்கிய) மௌலித் ஷரீபை வார்த்தை தவறினாலும், வாய்க்கு வாய் குப்பை, மவ்லித் குப்பை (நவூதுபில்லாஹ்) என்று கூறுவார்கள்.



இவர்களை பற்றி நாம் கண்டுக்கொள்ள தேவை இல்லை. தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் தெருக்களில் குப்பை, குப்பை என்று வருவார்கள்( இவர்கள் அந்த வேலையை பார்த்திருப்பார்கள் போலும்). அதனால் குப்பை, குப்பை என்று கூவிக்கொண்டு திரிகின்றார்கள். காலையில் வருபவர்கள் நமது வீட்டையும் நாட்டையும் சுத்தப்படுத்து கிறார்கள், இந்த குப்பைகள் மார்கத்தில் குப்பைகளை வீசுகிறார்கள். எப்பிடி நாம் தேவை இல்லாதவைகளை குப்பையாக்கி வீசுகின்றோமோ அப்படி இந்த (வஹ்ஹாபி) குப்பைகளை நாம் தூர ஏறிய வேண்டும், இந்த (வஹ்ஹாபி) கழிசடைகளை நாம் வெறுத்து ஒதுக்கினால் தான் நமது ஈமான் சுத்தப்படும். மேலும் நம்மிடையில் இருக்கும் கெட்ட குணங்கள் போன்ற குப்பைகளை, இந்த (வஹ்ஹாபி) குப்பைகளிடம் வீசி விட வேண்டும். அப்போது தான் நமது வீடு சுத்தம் ஆகுவதை போல் நமது ஈமான் சுத்தம் ஆகுவோம்.


நாமும் நமது வருங்கால சந்ததியும் அல்லாஹ்வை மற்றும் அவனது தூதரை நேசித்து, சஹாபா பெருமக்கள் நபிகளார் ஸல்... அவர்களை புக
ழ்ந்ததை போல புகழ்ந்து ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ் ஜல்.... அருள் புரிவானாக!

ஆமீன்!!

ஆமீன்!

யாரப்பல் ஆலமீன்!


அபூத் தைய்யார்



அபூலஹபின் விரலில் தண்ணீர் புகட்டப்படுகிறது.

சமிபத்தில் சகோதரர் PJ அவர்களின் உறுப்பினர்கள் அபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா? என்று ஒரு தலைப்பை நமக்கு அனுப்பி இருந்தார்கள், இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் பதித்த ஒரு ஹதிஸை கட்டுகதை என்று நிராகரிக்கிறார்கள்.

இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் தொகுத்த ஹதிஸ்:

அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) கூறினார்:
ஸுவைபா, அபூ லஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூ லஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலு}ட்டினார். அபூ லஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம், '(மரணத்திற்குப் பிறகு) நி எதிர்கொண்டது என்ன?' என்று அவர் கேட்டார். உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார்.

மறுப்பவர்கள் எழுப்பும் கேள்விகள்:

1.கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.

2.அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை. கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.

3.இதைக் கூறுபவர் உர்வா என்பவர். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்; நபித்தோழர் அல்லர்.

4.கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.

5.எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.

முதல் கேள்வி:1.கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.

பதில்:


நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ கத்தாதா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்கள்.

உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும் . அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.


மேலும் கனவின் விளக்கத்தை இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் ''கனவுக்கு விளக்கமளித்தல்'' என்ற பாடத்தில் உற்று அறிந்தால் மறுப்பவர்கள் அதை தெளிவாக புரிந்து கொள்வார்கள்

இரண்டாம் கேள்வி:2.அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை. கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.

பதில்:
ஹதிஸை முழுமையாக ஆராயாமல் இருப்பதே இதற்கு காரணம்,

கனவு கண்டது யார்?

அப்பாஸ்(ரலி) அவர்கள் அபூலஹபைக் கனவில் கண்டார்கள், அவர்கள் அவனிடம் கேட்டார்கள்: உனது நிலை எப்படி என. அவன் கூறிலானான், உங்களைப் பிரிந்தபின் ஒரு நலமும் கண்டிருக்கவில்லை.(எனது மண்ணரையிலேயே), இருப்பினும் என் இவ்விரண்டு விரல்கிடையில் பானம் புகட்டப்படுகிறேன், துவைபாவை உரிமைவிட்ட காரணத்தால்.."மேலும் எனக்கு வேதனையை ஒவ்வொரு திங்களும் இலேசக்கப்படுகிறது. மஃபாஹீம்.. பக்கம் 226)

நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் உள்ள சிறிய தந்தையான அப்பாஸ்(ரலி) அவர்களின் கனவாகும்.கனவு கண்டது நபி(ஸல்) அவர்கலின் குடும்பத்தில் உள்ளவராவர்கள்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.

மூன்றாவது மற்றும் நான்காவது கேள்வி:
3.இதைக் கூறுபவர் உர்வா என்பவர். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்; நபித்தோழர் அல்லர்.

4.கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.

பதில்:

உர்வா(ரஹ்) அவர்கள் நபித்தோழர் என்று மறுப்பவர்கள் கூறினாலும், உர்வா(ரஹ்) அவர்கள் சஹபாக்கள் காலத்தில் வாழ்ந்த மிக நம்பிக்கையான தாபின்களில் இடம் பெறுபவர்கள், பல ஹதிஸ்களை மிகப் பெரிய சஹபாக்களை(அன்னை ஆயிசா(ரழி...), இப்னு உமர்(ரழி...), இப்னு அப்பாஸ்(ரழி...) இன்னும் பல சஹாபாக்கள் இன்னும் பல சஹாபாக்கள் (ரழி...)) நேரடியாக சந்தித்து ஹதிஸ்களை கற்றவர்கள், இந்த மாபெரும் உண்மையை மறைத்து தமது வாதத்தை நிலைநிறுத்த முற்படுகின்றார்கள், தனது அறிவுக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக ஒரு ஸஹிஹ்வான ஹதிஸ்களை பலகினமாக்க முற்படுகின்றார்கள், சூனியம் சம்பந்தப்பட்ட ஹதிஸ்களை போல்... அல்லாவுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.

உர்வா(ரஹ்) அவர்கள் மட்டும் இதை கூறுவது இல்லை, இப்னு ஸஃது(ரஹ்), அப்துல்லாஹ் இப்னு முஹம்மதிப்னி வஹ்ஹாப்(ரஹ்), இப்னுல் ஜவ்ஸி(ரஹ்)) ஆகியோரும் கூறுகின்றார்கள். ஹதிஸ்களை முழுவது ஆராய்மல் அறை குறைவாக படித்து உளருவது தான் இது போன்ற ஹதிஸ் கலை ஞானம் இல்லாமல் இருப்பது இது போன்ற நிலைமைக்கு ஹதிஸை நிரகரிக்க காரணமாகும்.

அபூலஹப் மரணித்த பின் அவரை கனவில் காணப்பட்டது. அவரிடத்தில் உங்களின் நிலை என்ன என்று கேட்கப்பட்டது. நான் நரகத்தில் இருக்கின்றேன், நபி(ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை எனக்கு துவைபா அம்மையார் அவர்கள் நற்செய்தி கூறியதாலும் நபி(ஸல்) அவர்களுக்கு அப்பெண்மணி பாலூட்டியதாலும் அப்பெண்ணை நான் உரிமையிட்டிருந்தேன். அதனால் ஒவ்வொரு திங்கட் கிழமையும் என் விரல்களுக்கு மத்தியிலிருந்து விரல் நுனியளவு கொட்டும் நீரை நான் உறிஞ்சி குடிக்கின்றேன் என்றார். காஃபிரான, இறைவனால் சபிக்கப்பட்ட ஒருவர் நபி(ஸல்) அவர்கள் பிறந்ததை பற்றி சந்தோஷம் அடைந்ததால் அவருக்கு இந்த சலுகை கொடுக்கப்பட்டதென்றால், உண்மையான ஒரு முஸ்லிம், நபி(ஸல்) அவர்கள் மீது மீலாது விழா கொண்டாடுவதால் அவருக்கு சுவர்க்கம் கிடைப்பது நிச்சயம் (இப்னு ஸஃது(ரஹ்), அப்துல்லாஹ் இப்னு முஹம்மதிப்னி வஹ்ஹாப்(ரஹ்),இப்னுல் ஜவ்ஸி(ரஹ்))

மேலும் அல்லாமா இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். '' குர்ஆன்(அபூலஹபுடைய இரண்டு கைகளும் நாசமாட்டும் மேலும் அவனும் நாசமாகட்டும் (குர்ஆன் 111:2)) யாரைப் பழித்து ஒரு வசனத்தில் கூறுகிறதோ அவனுக்கு மவ்லித்துன்னபி ஸல்லல்லாஹு கொண்டாடியதால் (முன்னர் கண்டபடி) கூலி கொடுக்கப்பட்டானென்றால், ஏகத்துவத்தை நிலைநாட்டி வரும் ரஸுலில்லாஹி(ஸல்) அவர்களின் உம்மத்திலுள்ள முஸ்லிம், மீலாது ''நபி(ஸல்)'' அவர்கள் பிறந்த தினத்தில் மகிழ்ச்சியை வெளியிடுவதினால் அவரின் நிலை எவ்வாறு இருக்கும், உண்மையில் அதைவிட பல்லாயிரம் மடங்கு நற்கூலி அளிக்கப்படுவர் என்பது திண்ணம். (முத்தஸருஸ்ஸீரத், பக்கம் 113).

இப்னு ஜவ்ஸி(ரஹ்), அவர்களின் ஹதிஸ்கலை கூற்றை ஏற்கமாட்டோம் எனக் கூறினால், தனது இணைய தளத்தில் இப்னு ஜவ்ஸி(ரஹ்), வழியாக பதித்துள்ள அனைத்து ஹதிஸ்களையும் வாபஸ் பெற வேண்டும். அப்படி வாபஸ் பெறுகிறவன் தான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறான் என்று அர்த்தம். அப்படி இல்லை என்றால் ரோசம் இல்லை என்று தான் அர்த்தம். இவர்கள் வேணுகிற போது இப்னு ஜவ்ஸி(ரஹ்), கூற்றை எடுத்து கொள்வார்கள், வேணாம் என்கிற போது எடுத்து கொள்ள மாட்டோம் என்று கூறுபவர்கள் நிச்சியமாக குழப்பத்தை பூமியில் உண்டாக்குகிறார்கள் என்பது சந்தேகமில்லை.

ஐந்தாவது கேள்வி:
5.எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.

பதில்:
நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.


இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'என உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நற்செய்தி கூறுகின்றவை ('முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை' என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் 'நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'நல்ல (உண்மையான) கனவு' என்று விடையளித்தார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.


மேல் உள்ள ஹதிஸ் இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள். இதன் மூலம் கனவு கண்டது ஸாலிஹான இப்னு அப்பாஸ்(ரலி) ஆவார்கள், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு நல்ல மனிதர் கனவு கண்டால் நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். எனவே அப்பாஸ்(ரலி) அவர்கள் கண்ட கனவு உண்மையானதும், அல்லாஹ்விடம் இருந்தும் வந்ததாகும்.


நன்றி:
முஹம்மத் அப்பாஸ்

Friday, September 10, 2010

பெருநாளன்று கடை பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்.



செப்டம்பர் 9 ம் தேதி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறை பார்க்கப்பட்டது. பிறை பார்த்த ஆலிம், ஹாபிழை மதுரை மாவட்ட அரசு தலைமை காழியார் மௌலானா மௌலவி A. சையத் கா(ஹ)ஜா முஈனுத்தீன் B.A., அவர்கள் தொலைபேசியில் நேரிடையாக தொடர்பு கொண்டு உறுதி படுத்தப்பட்டு, இத்தகவலை தமிழக அரசு தலைமை காழியார் மௌலானா மௌலவி Dr. சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அவர்களுக்கு Fax மூலம் தகவல் அளிக்கப்பட்டு, பெருநாள் உறுதிப்படுத்தப்பட்டது.

பெருநாள் அன்று சில ஒழுக்கங்களை பேண வேண்டும், இது நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் வாழ்க்கையில் முன்மாதிரியாக இருப்பதால் நாம் பின்பற்றுவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  • காலை உணவு உண்டு விட்டு தான் பெருநாள் ற்காக வெளியேற வேண்டும்,

ஹழ்ரத் இப்னு உமர் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஃபித்ர் பெருநாள் அன்று உண்ணாமல் (அவர்களின் வீட்டை விட்டு) வெளியேறமாட்டார்கள். (திர்மிதீ)

  • சதகத்துல் ஃபித்ர் (என்னும் ஏழை வரியை) பெருநாளைக்கு செல்லுமுன் கொடுத்து விட வேண்டும்.

நாயகம் ஸல்... அவர்கள் ஜகாத்துல் ஃபித்ரை (சதகத்துல் ஃபித்ர்) ஈத் தொழுகைக்கு செல்லு முன் வழங்க கட்டளையிட்டுள்ளார்கள். (புகாரி)

  • யாருக்கு சதகத்துல் பித்ர் கொடுக்க வேண்டும்?

நாயகம் ஸல்... அவர்கள் சதகத்துல் ஃபித்ரை சிறுவர்கள், முதியோர்கள், ஆண்கள், பெண்கள், அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகிய அனைவர் மீதும் கடமையாக்கி உள்ளார்கள் என்று ஹழ்ரத் இப்னு உமர் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

நமது நோன்பில் ஏற்பட்ட குறைபாடுகளால் (எதார்த்தமாகவும் நிகழ்ந்து விட்ட, தீய பேச்சுக்கள், தீய பார்வைகள் இன்ன பிற தீய செயல்களால்) நமது நோன்பு வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கிக்கொண்டு இருக்கும், சதகத்துல் ஃபித்ர் வழங்கினால் தான் அல்லாஹ்வை சென்றடையும் என்று நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் பெருமானார் ஸல்... அவர்கள், நமது நோன்பை தூய்மை படுத்துவதற்காகவும், ஏழை எளிய மக்களின் உணவிற்காகவும்சதகத்துல் ஃபித்ரை கடமையாக்கி உள்ளார்கள்.


  • பெருநாள் தொழுகைக்கு செல்லு முன் பேரீத்தம் பழம் சாப்பிட வேண்டும் (நோன்பை விட்டு இருக்கின்றோம் என்பதற்காக, இல்லாவிட்டால் நோன்பை போலவே சூழ்நிலை இருக்கும், பசிக்காது, தண்ணீர் தேவை படாது, ஈத் அன்று நோன்பு வைப்பது ஹராம், அந்த நோன்பின் வழக்கத்தை அன்று விட்டு விடுவதற்காக) மேலும் பேரீத்தம் பழம் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள், சில பேரீத்தம் பழம் உண்ணாமல் பெருநாள் தொழுகைக்கு செல்ல மாட்டார்கள். ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்கள் மேலும் கூறினார்கள் நாயகம் ஸல்.... அவர்கள் ஒற்றைப்படையில் பேரீத்தம் பழம் உண்ணுவார்கள். (புகாரி)

  • பெருநாள் தொழுக இருப்பவர்கள், ஈத் அன்று பெருநாள் தொழுகைக்கு முன்னோ, பின்னோ (நபிலான தொழுகைகளை) தொழுக கூடாது.

ஈத் பெருநாள் அன்று நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் இரண்டு ரக்'அத் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் எந்த தொழுகையையும் தொழுக வில்லை என ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி.... அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

  • மேலும் பெருநாளிருக்கு ஒரு வழியில் சென்று மற்றொரு வழியில் திரும்புவது சுன்னத்.

ஹழ்ரத் அபூ ஹுரைரா ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் ஸல்... அவர்கள், ஈத் தொழுகைக்கு ஒரு வழியில் சென்று, மற்றொரு வழியில் திரும்புவார்கள். (திர்மிதீ)

ஹழ்ரத் ஜாபிர் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள், நாயகம் ஸல்.... அவர்கள் மாற்று பாதையில் திரும்புவார்கள் (புகாரி)

நபிகளாரின் ஒரு சுன்னத்தை சிறு விஷயமாக இருந்தாலும், பின்பற்றுவது, மறுமையில் வெற்றி அளிக்கக்கூடும், அதனால் இதை செய்து மறுமையில் வெற்றி பெரும் கூட்டத்தில் நம்மையும், நம் குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், நம் சந்ததியினர் அனைவரையும் ஆக்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல்ஆலமீன்!

நபிகளார் ஸல்.... அவர்கள் காட்டி தந்த வழியில் பிறை பார்த்து நோன்பு நோற்று, பிறை பார்த்து பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும்

ஈதுல் ஃபித்ர் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

அபூத் தைய்யார்

Tuesday, September 7, 2010

திருவாரூர் கலவரம் நடந்த உண்மை!



திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு



எது மார்க்கம்? ரௌடியிசமா? வெட்டு குத்தா? இது தான் நபி வழியா?

(போலி)தவ்ஹீத் ஜமாஅத்தின் போக்கிரி தனத்தில் பலியானவர்களின் புகைப்படம்:


திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் செய்துவருகின்றனர். சுன்னத் ஜமாஅத் பள்ளியில் (சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலுக்கு தான் போக கூடாது என்று உங்களின் வழி கேட்ட கூட்டத்தின் தலைவர் ஃபத்(து)வா வழங்கி இருக்கின்றாரே, பின்னர் ஏன் இங்கு வருகின்றீர்கள்) சுன்னத் ஜமாஅத் முறையோடு தொழுக வேண்டும் என்று சொல்லி இருக்க, வேண்டும் என்றே பிரச்சனை பண்ணிய (போலி) தவ்ஹீத் ஜமாத்தினர், பின்னர் ஊர் கட்டுப்பாட்டை மீறி வேறு இடம் தேர்ந்தெடுத்தனர். (தராவீ ஹ் தொழுகை இல்லாதவர்களுக்கு ரமழானில் இரவில் தொழுக வேறு இடம் எதற்கு?)


இது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கிராம ஜமாத்தார்கள், (போலி) தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் கேட்டபோது மீண்டும் பிரச்னையை ஆரம்பித்தனர் (ஒரு முடியோடு தான் இருந்தார்கள் போல இருக்கு).


இந்த பிரச்சனை வாக்குவாதத்தில் ஆரம்பித்து, கை கலப்பில் தொடர்ந்தது. இது இரவு வரை நீடித்தது. இதில் (போலி) தவ்ஹீத் களின் கையாளாக, அடியாளாக, வந்த திருமங்களக்குடி யை சேர்ந்த ரவுடி ஹஜ் முஹம்மது என்ற கொலைகாரன் (இந்த ஆளுக்கு பேரில் தான் ஹஜ்ஜும், நபிகளாரின் பெயரும்) தனது கை துப்பாக்கியை வைத்து 12 முறை சுட்டிருக்கின்றான். அதில் சுன்னத் ஜமாஅத் தலைவர் முஹம்மத் இஸ்மாயில் என்பவரும் கமிட்டி உறுப்பினர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். (பள்ளிவாசல் எதற்கு? தொழுகவா? கொலை செய்யவா? நபிகளார் ஸல்... அவர்கள் காட்டிய வழி என்ன?)

5 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த ஐந்து பேரில் 3 பேர் சமாதானத்திற்கு சென்ற இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இது ஏதோ ஆத்திரத்தில் செய்த செயல் இல்லை.12 ரவுண்ட் சுட்டு கொலைகள் செய்யும் அளவிற்கு, அவர்களுக்கு என்ன கேடு நேர்ந்து விட்டது..??? இது சதி செய்யப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது..அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை சுமுகமாக்க வரவில்லை. கொடூர ஆயுதங்களை கையில் ஏந்தி வருபவன், பிரச்சனையை பெரிதாக்கி, பிரிவினையை உண்டாக்கவே வந்துள்ளான். கொலை புரியும் பாதகர்களின் கூட்டத்தார் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். என் சமுதாய மக்களை பிளவு படுத்தி, அதில் குளிர்காய முயலும் அந்த (போலி) தவ்ஹீத் கயவர்கள் என்னும் மண்ணாங்கட்டிகள் அழிந்து போகட்டும். இப்படிப்பட்ட நிலையை உருவாக்கி,எம்மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய ஈனர்களை மக்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும்....

இதற்கு எந்த விளக்கமும் தர முடியாது. எந்த காரணங்களும் தந்து முடியாது. (PJ) அண்ணணின் பிடியை நம்பி ஆற்றில் இறங்கிய தம்பிகளே.. உங்களை பற்றிப்பிடிக்க சொன்னது (PJ) அண்ணனின் கயிற்றை அல்ல. அல்லாஹ்வின் கயிற்றை. அதுவே சரியானது. இப்படிப்பட்ட (PJ) அண்ணன்களின் கயிறு நம்மில் ஒருவருக்கு தூக்கு கயிறாகவும், மற்றவனுக்கு, துப்பாக்கி தோட்டாவாகவுமே மாறும்...

திருமங்கலக்குடியை சேர்ந்த ரவுடி ஹஜ்முஹம்மது, இவனை திருவிடைமருதூர்க்கு அழைத்து வந்தது யார்? அவர்கள் தான் பொறுப்ப்பு ஏற்க வேண்டும்! ஹஜ்முஹம்மதுவை அழைத்து வந்த (போலி) தவ்ஹீதை சேர்ந்த குதுபுதீன் என்பவனை அந்த ஊரை விட்டு விரட்டவேண்டும்.


இன்று விளக்கம் கொடுக்கூடியவர்கள் அவர்கள் தன் இயக்கத்தை
பாதுகாப்பதற்கு அவன் எங்கள் ஜமாஅத்தை சார்ந்தவன் இல்லை என்று விளக்கம் கொடுக்கின்றார்கள்.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلاَ تَقْتُلُواْ أَنفُسَكُمْ إِنَّ اللّهَ كَانَ بِكُمْ رَحِيمًا


நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக்கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.(4:29)



(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். (2:191)

وَلَئِن مُّتُّمْ أَوْ قُتِلْتُمْ لإِلَى الله تُحْشَرُونَ


நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள். (3:158)



இன்று விளக்கம் கொடுக்கூடியவர்கள் அவர்கள் தன் இயக்கத்தை பாதுகாப்பதற்குஅவன் எங்கள் ஜமாஅத்தை சார்ந்தவன் இல்லை என்று விளக்கம் கொடுக்கின்றார்கள்.



நெருப்பு இல்லாமல் புகையாது. ஒரு வாதத்திற்கு ஹஜ் முஹம்மத் (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ஐ சேர்ந்தவன் இல்லை என்று வைத்துகொண்டாலும், (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ஐ சேர்ந்த குதுபுதீன் என்பவனுக்கு ஆதரவாக தான் வந்துள்ளான். ஒரு பேச்சிற்கு குதுபுதீனின் பரிந்துரைக்காக அந்த கொலைகாரன் வந்து இருந்தான் என்று வைத்துகொண்டாலும் குதுபுதீன் கூலி ஆள் வைத்து முஸ்லிம்களை அதுவும் ரமழான் மாதத்தில் கொன்றான் என்று வருமே தவிர
(போலி) தவ்ஹீத் ஜமாஅத் ற்கு இதில் சம்பந்தம் இல்லை என்று வரவே வராது. அந்த கொலைக்கு குதுபுதீனே பொறுப்பாளி (அதன் மூலம் (போலி) தவ்ஹீத் ஜமாத்தே பொறுப்பாளி)


இந்த விஷயத்தில் தங்களுடைய (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ற்கு SUN TV ன் மூலமாகவும் Nakkeeranin மூலமாகவும் முகத்திரை கிழிந்து விட்டதை எண்ணிப்பார்த்த (போலி) தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், எவ்வளவு பெரிய பூசணிக்காயையும் சோற்றுக்குள் அமுக்குவதாக எண்ணி கொண்டிருக்கும் PJ வை பேச வைத்து சுய விளக்கம் அளிக்கின்றார்கள். இந்த PJ (வனவாசத்தில் உட்காராமல் இங்கே என்ன வேலை
அந்த 6 மாத வாக்குறுதியும் வழக்கம் போல காற்றில் தானா?). செய்ததையும் செய்து விட்டு சுய விளக்கம் எதற்கு.

சரி இந்த PJ சுயவிளக்கம் அளிக்கும் போது ஒரு தெளிவு கிடைக்கும் என்று பார்த்தால், உண்மையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்காதோ என்று பார்த்தால், ஒப்புதல் வாக்குமூலம் தான் கொடுக்கின்றோம் என்று தெரியாமல் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். எப்பிடி? ஹஜ் முஹம்மத் (போலி) தவ்ஹீதை சேர்ந்தவன் இல்லை, குதுபுதீன் (போலி) தவ்ஹீதை சேர்ந்தவன், குதுபுதீனுக்கு ஆதரவாக ஹஜ் வந்தான். ஆனால் (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ற்கு சம்பந்தம் இல்லை. அது அவர்களின் PERSONAL. இது எப்பிடிஇருக்கு?

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இதில் (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ற்கு சம்பந்தம் இல்லை என்றால் என்ன அர்த்தம். மேலும் தகராறு செய்ய எந்த காலத்திலும் செல்லவில்லையாம்! எத்தனை பள்ளிவாசல்கள், எத்தனை பிரச்சனைகள், எத்தனை குடும்பத்தில் குழப்பங்கள், எத்தனை வழக்குகள், எத்தனை போலீஸ் வழக்குகள், இதற்கும் உங்களுக்கு சம்பந்தம் இல்லையா?

பள்ளிவாசல்களில் எங்களை அனுமதிப்பதில்லை, யார் பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயரை சொல்லுவதை விட்டும் தடுக்கின்றாரோ அவர்களை விட மிக அநியாயக்காரன் யார் இருக்கின்றார் (அல்-குர்'ஆன்) என்ற வசனத்தை சுன்னத் ஜமாஅத் ஆகிய நம்மை பார்த்து கூறினார்களே, ஒரு வாதத்திற்கு இவர்களுடைய கூற்று உண்மை என்று வைத்துக்கொண்டாலும் ஏன் தடுக்கின்றோம் புரியுதா மக்களே! இவர்கள் கொலைகாரர்கள்! கொள்ளைகாரர்கள்! மக்களுக்கு மத்தியில் துவேஷத்தை உண்டு பண்ணுபவர்கள். ஆனால் நாம் கூறுவது என்ன? நாம் சுன்னத் ஜமாஅத் முறை படி தொழுக சொல்கிறோம், காரணம் அது தான் சரியான முறை என்பதால்.

இந்த PJ வுடைய சொல், இந்த கொலை காரன் (போலி) தவ்ஹீதில் உறுப்பினர் இல்லை, அனுதாபியும் இல்லை, அங்கு தொழுக வருபவரும் இல்லை. ஆனால் உண்மை கொலைகாரன் (போலி) தவ்ஹீத் சம்பந்தப்பட்டவன் தான். எப்பிடி? இந்த கொலைகாரனிற்கும் இவர்களுக்கும் மத்தியில் எந்த தொடர்பும் இல்லாவிட்டால் எப்பிடி
இவரின் ஆள் இந்த கொலையாளியை அழைத்திருக்க முடியும், அவன் வைத்து இருந்த துப்பாக்கி licence பற்றி இவருக்கு தெரியும், அவனுக்கு இருந்த அரசியல் செல்வாக்கு எப்பிடி தெரியும், ஆக ஏற்கனவே இந்த கொலைகாரனிற்கும் (போலி) தவ்ஹீதிற்கும் மத்தியில் ஏதோ ஒரு தொடர்பு இருக்கின்றது.


இந்த PJ ஒரு நியாயவாதி என்று இருந்தால் இந்த கொலையாளியை பரிந்து பேசி இருக்க மாட்டார். ஆனால் பரிந்து பேசுகிறார். இவர் தப்பி விடுவார் என்றும் கூறுகிறார். எல்லா வற்றிற்கும் (சுய இச்சையில்) மார்க்க சட்டம் சொல்லும் இந்த PJ இந்த கொலையாளியின் விஷயத்தில் ஏன் (சுய இச்சையில்) மார்க்க சட்டம் சொல்லாமல் நியாயம் கற்பிக்கின்றார். இந்த கொலையாளி செய்த கொலை தவறாம், ஆனால் செய்த செயல் சரியாம்! தலை சுற்றுகிறதா! உங்களுக்குக்கே இப்படின்னா , அவர் பேட்டியை பார்த்த எனக்கு எப்பிடி இருக்கும்?

வழக்கமான குழப்பங்களும், உளறல்களும் தான் அவருடைய விளக்கமாக வந்தது.

இவர்கள் பிரச்சனை பண்ணுபவர்கள் இல்லை என்று சொல்கின்றார்கள், உண்மையில் மார்க்கம் பின்பற்றி வந்த விஷயத்தில் புது குழப்பங்களை புகுத்தி பிரச்சனையை பண்ணியது யார்? 1998 கோவை குண்டு வெடிப்பில் அப்பாவிகளை சிக்க வைத்தார்கள் என்றும் இவர்கள் மேல் குற்றச்சாட்டு உள்ளது. எத்தனை நீதி மன்ற வழக்குகள் இவர்களால்? யோசித்து பாருங்கள் இவர்களின் கூற்றில் உண்மை உள்ளதா என்று.

மேலும் இவர்களை அழிக்க நாம் என்னுகின்றோமாம். அதில் வெற்றி காண முடியாதாம். சிரிப்பு தான் வருகிறது. இவர்களை நாம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லையே. இவர்கள் தானாக பணத்திற்காக அழிந்துவிடுவார்கள். அல்லாஹ் மறுமையில் இவர்களை அழித்துவிடுவான், இங்கு வாழ வைத்து கொண்டு தான் இருப்பான் என்று எங்களுக்கு தெரியுமே!

நபிகள் நாயம் ஸல்... அவர்கள் இஸ்லாத்தில் 72 வழிகெட்ட கூட்டம் வரும் (திர்மிதி) என்று சொல்லி இருக்கின்றார்களே, அதனால்
அந்த கூட்டம் வரும் என்று எதிர் பார்த்து கொண்டு அமர்ந்து இருக்கின்றோம். உங்களை நாங்கள் அழிக்க தேவை இல்லை. உங்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்பதை தெரியப்படுத்திக்கொண்டு, வீடுகளில், பள்ளிவாசல்களில், பிரச்சனை பண்ண கூடிய இந்த கூட்டத்தை உங்களை நெருங்க விடாதீர்கள். நீங்கள் பஞ்சாக இருக்கின்றீர்கள், இவர்கள் நெருப்பாக இருக்கின்றார்கள், உங்கள் பக்கத்தில் வைத்துக்கொண்டால் இவர்கள் உங்களை சீரழித்துவிடுவார்கள். ஜாக்கிரதை. இப்படிப்பட்ட அறிவை விட்டும், இந்த கொலைகாரர்களை விட்டும், இந்த கொலைகாரர்களை பரிந்து பேசும் இக்கயவர்களை விட்டும் என்றென்றும் அல்லாஹ் நம்மையும் நம் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றுவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

மதுரை நாபிஈ