முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Friday, September 15, 2017

பிரிவினை வாதிகள் யார்? மத்ஹப் வாதிகளா? (போலி) தவ்ஹீத் வாதிகளா?

இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று  ஒட்டு மொத்த தவ்ஹீத் கூட்டம் என்று உரக்க சொல்லலாம்.

தமிழகத்தில் 1980 களில் மத்ஹபை பின்பற்றுபவர்களுக்கு மத்தியில் வயிற்று பிழைப்பிற்காக குளறுபடியான ஒரு மதத்தை ஆரம்பித்தவர்கள் இந்த கூட்டத்தினர். ஆரம்பிக்கும் போது அவர்கள் வைத்த வாதம்.... இஸ்லாத்தில் இறைவன் ஒன்று. மார்க்கம் ஒன்று. வேதம் ஒன்று. ரசூல் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒன்று. ஆனால் இவர்கள் 4 மத்ஹபாக பிரிந்து உள்ளார்கள் ஏன் என்று வினா தொடுத்து அதற்கு காலம் காலமாக பதில் கூறப்பட்டும்  வருவது அனைவரும் அறிந்ததே. 

கவாரிஜ்கள் முஃதஜிலாக்கள்  வழக்கப்படி இது மூமின்களுக்கு பொருந்தும் குர்ஆன் வசனம் என்பதை போல் முனாபிகீன் களை பற்றி விழிக்கும் ஒரு ஆயத்தை ஆதாரம் காட்டி மத்ஹபை விமர்சித்து பேசுவார்கள். என்ன செய்வது நபிகளாரின் கூற்று படி அறிவு கம்மியானவர்கள் தானே. ஏற்று கொள்வதற்கும் அறிவிலியான கூட்டம் இருக்க தானே செய்கிறது. 

அந்த வசனம்.... 

وَالَّذِيْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِيْقًۢا بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ‌ؕ وَلَيَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰى‌ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏ 

இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்க, குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (9:107)

இந்த வசனம் காட்டி பார்த்தீர்களா நான்காக பிரிந்துள்ளார்கள். இவர்களை நோக்கி தான் இது கூறப்பட்டது என்று கூறுவது. (பொய்யன் பீ ஜே உடைய பேச்சு நம்மிடம் ஆதாரம் உள்ளது). இது முனாஃபிக்கீன் களை  பற்றி கூறப்பட்ட ஆயத் ஆகும். ஆனால் இதை ஒரு அடிப்படையாக வைத்தால் தற்கால முனாஃபிக்கீன்களையும் இந்த ஆயத்  பொருந்துவதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.    இவ்வசனத்தில் அல்லாஹ் நான்கு விஷயங்களை சுட்டி காட்டுகின்றான். அவை சிகப்பு எண்  கொண்டு விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

1. குஃப்ர். குஃப்ர் என்றால் இறை நிராகரிப்பு, இறைவனை  நிராகரிப்பதும், அவனின் சட்டங்களை நிராகரிப்பதும் குஃப்ரிற்கு கொண்டு செல்லுமே...! அதை யார் செய்வது? இறைவனுக்கு உருவம் கொடுப்பவர்கள், யார்? இது இறை நிராகரிப்பு இல்லையா? குர்ஆனில்  எழுத்து பிழை காண்பது யார்? இது இறை நிராகரிப்பு இல்லையா? ஹதீஸ்களை புறம் தள்ளுவது யார்? இது இறை நிராகரிப்பு இல்லையா? கடமையான ஜகாத்தை மானம்கெட்ட தனமாக மறுப்பது யார்? இது இறை நிராகரிப்பு இல்லையா? இதை யார் செய்வது???? இதை நடு நிலையாக சிந்தித்து மேல் உள்ள வசனத்தில் பொருத்தி பாருங்கள் புரியும்.

 2. முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும்... ஒரு இயக்க வாதியிடம் மற்றொரு இயக்கத்தின் சட்டத்தை கூறி இது தானே தவ்ஹீத் என்று கூறி பாருங்கள். இல்லை இது சரியான கொள்கை அல்ல அது அவர்களுடைய கொள்கை அது ஷிர்க் அது குஃப்ர்  அது பித்அத்து  அது வழிகேடு என்று ஜகா வாங்குவதை காண முடியும். உதாரணமாக  பிறை பற்றி ஒருவொருக்கொருவர் குறை கூறுவதை நாம் அறிந்தது தான். இருப்பினும் தவ்ஹீத் ஜமாஅத் விவாதம் செய்கின்றது என்று வைத்து கொள்வோம் அவர்களிடம் உங்கள் கொள்கை உலகம் முழுதும் ஒரே  பிறை என்று  வாதிட்டாலோ அல்லது JAQH ஜமாத்தில் இப்படி இருக்கின்றதே என்று கூறினாலோ அவர்கள் என்ன கூறுவார்கள்? எங்கள் கொள்கை பற்றி எங்களிடம் பேசுங்கள் அவர்களை பற்றி நாம் பதில் சொல்லமாட்டோம் அல்லது நாம் எப்பிடி அவர்களின் கொள்கைக்காக பதில் சொல்வது என்று தானே கூறுவார்கள்?????

இப்படி கூறும் இதே நபர்கள் தானே களியக்காவிளை யிலும் கோவை யிலும் மத்ஹப் தலைப்பில் ஹனபி சட்டத்தையும், ஷாஃபி  சட்டத்தையும், மாலிகி சட்டத்தையும், ஹம்பலி  சட்டத்தையும் எங்கள் இமாம்களிடத்தில் சுட்டி காட்டி கேள்வி கேட்டார்கள்...???? அனைத்து மத்ஹப்  களுக்கும் ஒரே  இமாம்கள் தானே பதில் அளித்தார்கள்.... இப்படி இயக்க வாதிகளிடம் எதிர் பார்க்க முடியுமா? பிரிவினை எங்கே இருக்கின்றது??? மத்ஹபிலா???? நடு நிலையாக சிந்தித்து மேல் உள்ள வசனத்தில் பொருத்தி பாருங்கள் புரியும். பிரிப்பது யார் ???  பிரிவினை வாதிகள் யார்????

 3. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை  நிறுவியவர்கள்... திருவிடைச்சேரி சம்பவம் யாருக்கும் மறந்து இருக்காது.... செய்தது யார்???  பள்ளி என்ற பெயரை வைத்து கொண்டு ரமழான்  என்றும் பாராமல் கடைசி ஒற்றை படையான இரவின் கண்ணியம் கூட காக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது யார்???? 

ஃபித்ரா பணத்தை வைத்து சண்டை போடுவது யார்?? சுனாமி வைத்து பிரச்சனையை செய்வது யார்? ஜகாத் பண மோசடி என்று போர் புரிவது யார்? பொருளாதார மோசடி, பெண் விவகாரம் என்று அசிங்கம் செய்வது யார்? நடு நிலையாக சிந்தித்து மேல் உள்ள வசனத்தில் பொருத்தி பாருங்கள் புரியும்.

4. இப்படி பட்ட நயவஞ்சர்களை பற்றி, நாக்கில் தேன்  தடவி இப்படி பேசும் இந்த அயோக்கியர்களை பற்றி அல்லாஹ் அழகாக பின் வருமாறு கூறுவான்.   “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு எப்படி நடக்கின்றதோ அதை அப்படியே  ஏற்கனவே சஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் விஷயத்திலும், அந்த முனாஃபிக்கீன்கள்  விஷயத்தில் நடந்ததை சுட்டி காட்டும் இறைவன் தொடர்ச்சியாக அடுத்த வசனத்தில் இப்படி பேசுகின்றான். 

لَا تَقُمْ فِيْهِ اَبَدًا ‌ؕ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ؕ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ

ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.(9:108)

 இவ்வசனத்தில் ஏற்கனவே இருக்கும் பள்ளிவாசலை தவிர்த்து புதிதாக பள்ளிவாசல் என்ற பெயரில் இருக்கும் இந்த வழிகேட்டு பள்ளிவாசலில் தொழுகை வேண்டாம் என்று அல்லாஹ் கூறுகின்றான். தொழுவதற்கு ஏற்ற பள்ளி ஏற்கனவே இருக்கும் பள்ளி என்று கூறுகின்றான்.

 1400 ஆண்டுகளாக பள்ளிவாசல்கள் இருக்கும் நிலையில் புதிதாக ஆரம்பிப்பவர்கள் யார்? தக்வா எங்கே இருக்கின்றது??? எந்த பள்ளியில் அல்லாஹ் தொழுகை நடத்த சொல்லுகின்றான்.  1990 களில்  ஒரு பேச்சில் நாங்கள் ஷியாவை போல தனி பள்ளி கட்டி வழிகேட்டு ஜமாஅத்தாக மாட்டோம் என்று கூறிய பீ ஜே... அப்படி புது பள்ளி காட்டினால் அது வழிகேடு என்று ஒத்துக்கொண்ட பீ ஜே  இன்று புதிதாக பள்ளி கட்டி கொண்டு சென்றால் வழிகேடு என்று ஒத்து கொண்டது தானே அர்த்தம்.

இப்படி முனாஃபிக்களின் அடையாளத்தை காட்டி கொண்டு வரும் இறைவன் இதில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரு வழியையும் கூறுவான். அது 

اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏ 

மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (9:112)
 
மத்ஹப் வாதிகள் எந்த பள்ளியிலும் தொழுது கொள்வார்களே... ஆனால் தவ்ஹீத் வாதிகள் அவர்களின் இயக்க பள்ளியை தவிர வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களின் பள்ளியில் தொழுவதில்லையே ஏன்??? அதற்கு சுன்னத் ஜமாஅத் பள்ளியில் தொழுது கொள்வோம் என்று எங்கள் பள்ளியில் தொழுது கொள்கின்றனரே  ஏன்??? பிரிவினை எங்கு இருக்கின்றது??? வார்த்தை ஜாலங்களை  வைத்து மத்ஹபை பற்றி தவறாக கூறி உங்கள் பிரிவினை களை  மறைத்து ஒரு பெரும் கொண்ட சமூகத்தை நரகில் தள்ள யூதர்கள் செய்த சதியே இந்த பிரிவினை வாதமும்... அதற்கு தூண்டுகோலாக இந்த இயக்க போதையும்.

வழி தவறி சென்றவர்கள் இவ்வுலகின் EGO பாராமல் அல்லாஹ்வை பயந்து நடுநிலையோடு சிந்தித்து தெளிவு பெரும் நோக்கோடு விளக்கத்தை பெற்று நேர்வழி வந்தால் அல்லாஹ் மன்னிப்பவனாக தானே இருக்கின்றான். 

அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு பிரிவினை வாத இயக்க போதையில் இருந்து விடுபட்டு நம் சமுதாய மக்கள் இஸ்லாத்தில் அதன் வடிவாக 1400 ஆண்டுகளாக இருக்கும் வழியில் வாழவும், நம்மையும் நம் வருங்கால சந்ததியினரையும் அவர்களின் அருகாமை கூட கிடைக்காமல் காக்கவும் வேண்டி அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக முடிக்கின்றேன். அல்லாஹ் நம் துஆ வை ஏற்று கொள்வானாக!!!

ஆமீன்!!! ஆமீன்!!!
யாரப்பல் ஆலமீன்...!!!

வஸ்ஸலாம் 

மதுரை நாஃ பிஈ

Tuesday, February 12, 2013

தூத்துக்குடி விவாதம்

தொடருகின்றது வெற்றி...

அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் எப்போதும் சத்தியத்திற்கே வெற்றியை தருவான். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் புனிதமிகு மதீனா ஷரீபிற்கு ஹிஜ்ரத் சென்ற பிறகு பத்ரு போர் மூண்டது. பத்ரு போர் ஏற்படுவதற்கு முன் மக்காவில் இருந்து அபூ ஜஹல் ஒரு துஆ செய்தான். இறைவனே சத்தியத்திற்கு வெற்றி தா என்பது தான் அந்த து'ஆ. காபாவின் புண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றால் அங்கு கேட்கப்படும் து'ஆ அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதனால் அல்லாஹ் கேட்பது அபூ ஜஹ்ல் ஆக இருப்பினும், அபூ ஜஹ்லின் து'ஆவையும் ஏற்று கொண்டான், சத்தியத்திற்கு வெற்றியும் தந்தான். இதே போல் தான் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் சத்தியத்திற்கே வெற்றி கிடைக்கும். 

அதனடிப்படையில் தான் சுன்னத் ஜமாத்திற்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்து கொண்டிருக்கின்றது. முதன் முதலில் வஹ்ஹாபிகளை களியக்காவிளையில் அவர்களே எதிர்பாராத நிலையில் மடக்கி பிடித்தோம். அங்கு மிகப்பெரும் வெற்றி. இந்த போலி தவ்ஹீத்களோடு இருந்தவர்களே இவர்கள் (போலி) தவ்ஹீத் வாதிகள் மிகப்பெரிய  தோல்வியை சந்தேகத்திற்கு இடமின்றி சந்தித்தார்கள் என்று ஒத்துக்கொண்டு அவர்களின் இணைய தளங்களிலேயே இதை பதிப்பித்து இருந்தார்கள். தொடர்ந்தது சென்னை விவாதம். இதில் அல்லாஹ்விற்கே உருவத்தை கற்பிக்கின்றார்கள் என்று வெளிப்படுத்தியதை உணர்ந்த வஹ்ஹாபி தொண்டர்களே, என்னங்க இது சுன்னத் ஜமாத்தினர் தான் இந்த கருத்தை சொல்கின்றார்கள்  என்று நினைத்து கொண்டிருந்தோம், நீங்களா இதை கூறுகின்றீர்கள் என்று கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ஏற்பட்ட விளைவு இவர் ஆறு மாத காலம் வனவாசம் சென்றது. தற்போது தூத்துக்குடி விவாதம்.  

இந்த விவாதத்தை ஏற்பாடு செய்வதற்குள் சுன்னத் ஜமாத்தினரான நாங்கள் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா? களியக்காவிளை விவாதத்திற்கு முன்:  என்னங்க நாங்கள் விவாதத்திற்கு அழைக்கின்றோம், இவர்கள் தான் வருவதில்லை. சத்தியம் சுன்னத் ஜமாஅத் ன் பக்கம் இருந்தால் விவாதத்திற்கு வர வேண்டித்தானே என்று ஒரு பக்கம் சுன்னத் ஜமாத்தின் ஆலிம்களை பற்றி இட்டுக்கட்டிய பொய்யை பொதுமக்களிடம்  கூறி விட்டு, மறு பக்கம் ஹழ்ரத் உமர் ரழி... அவர்கள் வரும்போது ஷைத்தான் ஓடுவதை போல ஓடி விடுவது வழக்கமாக வைத்து இருந்தார்கள். ஆனால் நாம் விரித்த வலையில் அல்லாஹ் ஜல்... சிக்க வைத்தான். அதற்க்கு பிறகு நாம் விவாதத்திற்கு அழைத்து கொண்டு இருக்கின்றோம். தற்போது விவாதம் என்பதை பற்றி வாயே திறப்பதில்லை. நாங்கள் விவாதத்திற்கு அழைக்கவில்லையே, நீங்கள் தானே அழைக்கின்றீர்கள் என்று  சென்னை விவாதத்தின் போது கூட  பொய்யன் ஜைனுலாபிதீன்கூறினார். அப்படி தான் இந்த விவாதமும்.

இந்த விவாதத்தை பற்றிய அழைப்பு சென்னை விவாதத்திற்கு முன்னே விடுக்கப்பட்டது. ஓடி ஒளிந்து கொண்டு இருந்தார்கள். யாரோ எங்கோ கொடுத்த விவாத அழைப்பு கடிதத்தை ஏற்று சென்னை விவாதத்தில் மாட்டியவர்கள், நேரிடையாக இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் போது பேச்சே பேசியது இல்லை. ஏன் தெரியுமா?!?!?!?!? தலைப்பு அப்படி.... அப்படி என்ன தலைப்பு? புனித மிகு குர்'ஆனில் எழுத்து பிழை உள்ளதா?

கேள்வி: அது என்னங்க எழுத்து பிழை? முஸ்லிம்களா கூறுவது?
பதில்: இல்லைங்க அது தான் இல்லைங்க, இது யூதர்களின் கை கூலிகள் கூறுவது.

கேள்வி: எங்கு கூறினார்கள் ?
பதில்: இவர்கள் எழுதி இருக்கும் தர்ஜமாவில் கூறினார்கள்.

கேள்வி: ஏன் கூறினார்கள்?
பதில்: யூதர்களிடம் இருந்து பணம் பெற கூறினார்கள்.

கேள்வி: ஏன் அபாண்டமாக முஸ்லிம்கள் மீது குறை கூறுகின்றீர்கள்?
பதில்: ஏங்க, குர்ஆனில் பிழை இருக்கின்றது என்று முஸ்லிமாக கூறுவான்? திருத்தப்பட்ட தவ்ராத்தையும், இன்ஜீலையுமே கூட இன்னும் அது இறை வேதம் என்று தானே அந்தந்த மதத்தவர்கள் கூறுகின்றார்கள். இன்ஜீல் கூட பொய் என்று இவர் விவாதம் எல்லாம் பண்ணினாரே! குர்'ஆனிலும் தப்பு இருக்கின்றது என்று குர்'ஆனை நம்பும் முஸ்லிம் எப்பிடி சொல்வான்?


கேள்வி: இவர்களோடு இருக்கின்றவர்கள் அனைவரும் இந்த கருத்தை ஒத்து கொள்கின்றார்களா?
பதில்: ஏன் இல்லை. இவர்கள் அனைவரும் பீ ஜே வை தானே இமாமாக ஏற்று இருக்கின்றார்கள். அவர்களுக்கு வேறு கருத்து இருக்குமா என்ன?

கேள்வி: இவர்கள் சுயமாக தானே ஆய்வு செய்து பின்பற்றுகின்றார்கள்?
பதில்: சுய அறிவு இவர்களுக்கு எங்கே இருக்கின்றது. இவர்கள் எழுதியது தான் எங்கள் கருத்தும் என்று கிடையில் இருக்கும் ஆட்டை போல, பூம் பூம் மாடு போல அல்லவா கலீல் ரசூல் என்பவர் விவாத ஒப்பந்தத்தில் கூறினார். 

கேள்வி: யாரும் எதிர்ப்பு தெரிப்பதில்லையா?
பதில்: எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாரும் உள்ளே இருக்க மாட்டார்கள், அப்படி எதிர்ப்பு தெரிவித்து விட்டால் உள்ளே இருக்க விடமாட்டார்கள். இவர்களோடு இருந்து, இவர்களை விட்டு பிரிந்தவர்கள் எல்லாம் இந்த கருத்தை எதிர்த்து கொண்டு தான் இருக்கின்றார்கள். சிலர் இந்த கருத்தை எதிர்த்து வெளியேவும் வந்து இருக்கின்றார்கள்.


நமது நிலைப்பாடு புனிதமிகு குர்'ஆனில் எழுத்து பிழையே இல்லை. ஆனால் (போலி) தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு, குர்'ஆனில் எழுத்து பிழை இருக்கின்றது. பாருங்கள் இதுதான் தூய வடிவின் லட்சணம். ஆலிம்களை குறை கூறினார்கள், பிறகு இமாம்களை இழிவு படுத்தினார்கள், பிறகு வலிமார்களை திட்டினார்கள், பிறகு சஹாபா பெருமக்களை கீழ்த்தரமாக பேசினார்கள். அதற்கு பிறகு நமது உயிரினும் மேலான நாயக கோமான் நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் மீது கை வைத்தார்கள். அது படிப்படியாக உயர்ந்து காபிரானார்கள். முதலில் நம்மை போன்றவர்கள் என்றார்கள், பிறகு பலகீனமான ஹதீதை ஏற்க கூடாது என்றார்கள். பிறகு நபி அவர்களுக்கு உலக விஷயத்தில் ஞானம் இல்லை என்றார்கள். பிறகு பலமான ஹதீதுகளை கூட ஏற்க கூடாது என்றார்கள், அதற்க்கு பிறகு நாயக கோமான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மார்கத்தில் தப்பு தப்பாக பேசினார்கள் என்றார்கள், பிறகு நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஷிர்க் செய்தார்கள் என்று கூறி இவர்கள் காபிரானார்கள். 

தற்போது அல்லாஹ்வின் வேதமாம் குர்'ஆனில் எழுத்து பிழை உள்ளது என்ற நச்சு கருத்தை நுழைக்க பார்க்கின்றார்கள். சற்று சிந்தியுங்கள். அல்லாஹ் கூறுகின்றான், இந்த வேதம் (மகத்தானது, அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்தது) அதில் சந்தேகமே இல்லை. (2 : 2 ). இப்படி இவர்கள் கிளப்பி விடுவது இறை வேதத்தில் சந்தேகம் வருமா வராதா? கண்ணியம் நிறைந்த இஸ்லாமிய பெருமக்களே, இதற்கு இவர்கள் கூறும் காரணம் மிக அலாதியானது. குர்'ஆன் என்பது ஓசை வடிவில் தான் வந்தது. எழுத்தில் வரவில்லை. அதனால் எழுதியவர்கள் தப்பு தப்பாக எழுதி வைத்தார்கள் என்று வாதிடுகின்றார்கள். 

ஓசையில் தான் குர்'ஆன் வந்தது என்ற காரணத்தால் தான் போலும் ஒழு இல்லாமல் இருப்பவர்கள்,  குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் உள்ள பெண்கள், பேறு கால உதிரப்போக்குள்ள பெண்கள், காபிர்கள் என அனைவரும் குர்'ஆனை தொடலாம் என்று பத்வா கொடுத்தார்கள். அது எல்லாம் இருக்கட்டும், ஓசை வடிவில் இருப்பது தான் குர்'ஆன் என்று கூறுபவர்கள் ஏன் குர்'ஆனை அச்சு பிரதியாக வெளியிட வேண்டும்? இந்த கேள்வி விவாதத்தில் வைக்கப்பட்டது, பதில் இல்லை. ஓசை வடிவில் தான் பாதுகாக்கப்படுகின்றது, ஏட்டு வடிவில் பாதுகாக்கப்படவில்லை என்று கூறும் இவர்கள் கூட்டத்தில் உள்ள ஹாபிழ்கள் அனைவரும் ஏட்டு பிரதியை தான் பார்த்து மனனம் செய்துள்ளார்கள் என்பது தான் உண்மை. இதை பற்றி வினா எழுப்பப்பட்ட போதும் பதில் இல்லை. 

குர்'ஆன் எழுத்தில் இல்லை, ஆனால் நாங்கள் குர்'ஆனை எழுத்து வடிவில் வெளியிட்டு காசு சம்பாதிப்போம் என்று கூறாமல் கூறுகின்றார்கள். எங்கும் நமக்கு (போலி தவ்ஹீத் வாதிகளுக்கு) பங்கு வேண்டும் என்பது தான் நமது  (போலி தவ்ஹீத் வாதிகளுக்கு) நோக்கமே தவிர, மார்க்கம் இவர்களது நோக்கம் கிடையாது என்பது தான் உண்மை.

இது போன்ற கேள்விகளையெல்லாம் இவரது ஊரிலேயே (தொண்டி அல்ல, தெண்டியில்) வைத்து ஜாக் அமைப்பை சேர்ந்த முஜீபுர் ரஹ்மான் என்பவர் விவாதம் செய்த போது ஏதோ மழுப்பியவர்கள் இங்கு ஒன்றிற்கும் பதில் கூற வில்லை என்பது தான் உண்மை. பல கேள்விகள் வைக்கின்ற போது, அப்பாஸ் அலி என்பவர் என்ன சொன்னார் தெரியுமா? இதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்று அப்பட்டமாக, இவர்களுக்கு கிடைத்த மூன்றாவது வாய்ப்பிலேயே கூறினார். அப்படியானால் எது உண்மை புரிந்து கொள்ள வேண்டும். கேள்வி கேட்டால் பதில் சொல்வது தான் விவாதம். அதை விடுத்து விட்டு நமது தரப்பு கேள்வி கேட்கும் போது, இந்த வாதம் எப்போது வைப்பது என்பது நாங்கள் முடிவு செய்வோம், நீங்கள் முடிவு செய்ய தேவை இல்லை என்று கூறுகின்றார்கள் என்றால் எப்பிடி பட்ட தோல்வியை சந்தித்திருக்கின்றார்கள். 

அங்கு வைக்கப்பட்ட கேள்விகள் அனைத்தும், இவரது தர்ஜமாவில் இவர் சுட்டி காட்டிய வார்த்தையை பற்றியே கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொல்லாமல், இவர்களை பின்பற்றி கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை தங்கள் பக்கம் தக்க வைத்து கொள்ள எப்போதும் இவர்கள் செய்யும் திருப்பு வாதம் செய்ய தொடங்கினார்கள். என்ன தெரியுமா? பிக்ஹு கிதாபை எடுத்து வாதம் புரிய தொடங்கினார்கள். 
 
அய்யா இது பிக்ஹு பற்றிய விவாதம் இல்லை என்று கூறிய போதும் இவர்கள் சென்னையில் எப்பிடி குர்'ஆன் தப்சீர் என்ற தலைப்பின் போது பிக்ஹை எடுத்தார்களோ அப்படியே அதிலேயே நின்று கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்பதற்கு இதுவும் சாட்சி. எந்த விவாதத்தை எடுத்தாலும் இவர்கள் பிக்ஹு கிதாபையே எடுப்பவர்களாக இருக்கின்றார்கள். மக்கள் ஏமாளிகள் இல்லை. இன்னும் ஏமாந்து கொண்டு இருக்க. ஆக எந்த கேள்விக்கும் பதில் இல்லை என்பது தான் உண்மை. 

நாங்கள் விவாதத்தில் தோற்றுவிட்டோம் வஹ்ஹாபிகள் ஒப்புதல்:

இவர்கள் தெருவை நாறடிக்க போஸ்டர்கள் ஓட்டுவது வழக்கம். அதில் இஸ்லாமிய முறைக்கு மாற்றமாக அதாவது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் என்பதற்கு மாற்றமாக மக்கத்து காபிர்கள் சொல்வதை போல இறைவனே உன் திருப்பெயரால் பிஸ்மிகல்லாஹும்ம என்று பொருள் தரும் படியான அர்த்தமான இறைவன் திருப்பெயரால் என்று அச்சடிப்பது வழக்கம். தூத்துக்குடி விவாதத்திற்கு முன் கர்த்தரின் திருப்பெயரால் என்று மேலப்பாளையத்தில் அடித்து இருந்தார்கள் அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 

2010 ம் வருடம் சென்னையில் நடந்த விவாதத்திலும் 2012 ம் வருடம் தூத்துக்குடியில் நடந்த விவாதத்திலும் இறைவனின் திருப்பெயரால் என்று தாங்கள் செய்யும் இந்த மக்கத்து காபிர்களின் வழி முறையை நியாயப்படுத்திய இந்த கருத்து காபிர்கள் தற்போது தங்கள் நிலை தப்பு என்பதை ஒப்பு கொண்டு இருக்கின்றார்கள். கீழே பாருங்கள்.
 


 
இதுவும் இவர்கள் விவாதத்தில் தோற்று விட்டார்கள்  என்று இவர்கள் கூறும் வாக்குமூலமாகவே இருக்கின்றது. மேலும் இவர்களின் தர்ஜமா 10 ம் பதிப்பில் ஏராளமான மாற்றங்கள் நம் இமாம்கள் கூறிய விளக்கத்தின் அடிப்படையில் மாற்றி இருக்கின்றார்கள், இதுவும் இவர்கள் அப்பட்டமாக தோல்வியை ஒப்பு கொண்டதற்கு அடையாளமாகும்.

மேலும் இந்த நேரத்தில் இரண்டு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகின்றேன். ஒன்று, இந்த விவாத ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் போது இவரது தர்ஜமாவை தான் நாங்கள் ஏற்கின்றோம், அதே போல இந்த ஜமாத்தின் தொண்டர்களில் இருந்து பொறுப்பில் உள்ளவர்கள் வரை யார் மார்க்கம் பேசினாலும் அதற்கு எங்கள் ஜமாஅத்தே பொறுப்பாளி என்று கலீல் ரசூல் என்பவர் கூறினார். இதன் மூலம் ஒரு வாக்கு மூலத்தை பதிவு செய்து இருக்கின்றார். அதாவது நாங்கள் சுயமாக சிந்திப்பவர்கள் அல்ல, பீ ஜே வின் முகல்லிதுகள் தான், கிடையில் திரியும் ஆடுகள் தான். இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் கலீல் ரசூல் அவர்களே. நன்றி உங்கள் வாக்கு மூலத்திற்கு.


இரண்டாம் விஷயம்.  ஜமாலி ஹழ்ரத் அவர்களிடம் விவாதம் செய்து தோற்று போகும் காலமெல்லாம் இருந்தது. ஜமாலி ஹழ்ரத் அவர்களே இந்த பீ ஜே வை விட மிகவும் இளமையானவர்கள். ஆனால் தற்போது இந்த பீ ஜே சிக்கி சின்னாபின்னம் ஆகி கொண்டிருப்பது, பீ ஜே சங்கரன் பந்தல் மதரசாவில் முதல்வராக பொறுப்பேற்று சில காலம் கடந்த நிலையில் பிறந்த ஒரு மிக இளம் மௌலவி யிடம். இன்னும் எத்துனை சிறிய ஆலிம் பெருமகனார்களிடம் சிக்க போகின்றார், கேவலப்பட போகின்றார் என்பது தெரியவில்லை. அதற்குள் திருந்த வேண்டுமாய் கேட்டு நம்முடைய இந்த வெற்றி தகவலை முடித்து கொள்கின்றோம்.  மேலதிக தகவல் மிக விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ்...

இந்த கூட்டத்தாரை விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! 

ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!!
 
யா ரப்பல் ஆலமீன்.
 
வஸ்ஸலாம்.

மதுரை நாபிஈ

Wednesday, September 26, 2012

மாபெரும் விவாதம்: நேரடி ஒளிபரப்பு

புனித குர்ஆனில் எழுத்து பிழைகளா? (நவூது பில்லாஹ்...!) 


விவாதம்: நமது இணைய தளத்தில் 

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

விவாதம் மற்றும் ஒளிபரப்பப்படும்  

நேரம்:

காலை 10 மணி முதல் 1 மணி வரை
பகல்  2.30 மணி  முதல் 5 மணி வரை 
மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை

தேதி: 

இன்ஷா அல்லாஹ்  29-09-2012 (சனிக்கிழமை), மற்றும் 30-09-2012 (ஞாயிற்றுக்கிழமை) 

இடம்: தூத்துக்குடி

தலைப்பு:
  
புனித குர்ஆனில் எழுத்து பிழைகளா? (நவூது பில்லாஹ்...)

சுன்னத் ஜமாஅத் நிலைப்பாடு:


புனித குர்'ஆனில் எழுத்து பிழை இல்லை.

தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு:

குர்'ஆனில் எழுத்து பிழை உண்டு.




Saturday, December 31, 2011

இந்தியாவின் மிகப்பெரிய மஸ்ஜித் மிக விரைவில்


இந்தியாவின் மிகப்பெரிய மஸ்ஜித் மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.....

நாயக கோமான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் தங்களின் ஹஜ்ஜின் போது (நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு விடலாம் என்பதற்காக ஒரே ஒரு ஹஜ்ஜு தான் தன் வாழ்நாளில் செய்துள்ளார்கள். அதுவும் அவர்கள் நம் கண்களை விட்டு மறைக்கப்பட இருந்த அந்த கடைசி ஆண்டு. இதுவும் அவர்களின் மறைமுக ஞானத்தால் செய்தார்கள்.) இஹ்ராம் களையும் அடையாளமாக ஹழ்ரத் முஅம்மர் இப்னு அப்துல்லாஹ் ரழி... என்ற தோழரை (நாவிதர்) அழைத்து தங்களுடைய தலையில் இருந்த அந்த திரு முடியை மழிக்க சொன்னார்கள். எதிலும் ஒரு ஒழுங்கை காட்டி தந்த நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் முதலில் வலது பக்க முடியை எடுக்க சொன்னார்கள். பிறகு இடது புற முடியை எடுக்க சொன்னார்கள் இப்படியாக முழுதும் மழிக்கப்பட்ட திரு முடியை ஒன்றாக சேகரித்து, அதை ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களிடம் வழங்கினார்கள்.


அப்படி வழங்கிய அந்த திருமுடியை சஹாபா பெருமக்கள் மத்தியில் பங்கு வைக்க சொன்னார்கள் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள். இந்த குறுகிய கால வாழ்க்கையில் 1,40,000 (ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரம் ) சஹாபாக்கள் நபிகளாரோடு இருந்தார்கள். அனைவருக்கும் பங்கு வைத்து விட்டு சில முடிகள் ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களிடம் இருந்தது. அங்கே இருந்தது சஹாபிகள் அதனால் நபி ஸல்... அவர்களின் புனிதமிகு அந்த திருமுடியை வாங்கி வாங்கி பாதுகாத்து கொண்டார்கள். ஒருக்கால் இன்றைய நவீன வாதிகள், அயோக்கியர்கள், மார்க்கத்தை நாசமாக்கும் புற்றீசல்கள், கரையான்கள், நபிகளார் மேல் பொறாமை பிடித்தவர்கள், அங்கே இருந்திருந்தார்களேயானால் தலை முடியை என்னிடம் எதற்கு தருகின்றீர்கள் அதை தூர வீசுங்கள் என்று கூறி இருப்பார்கள். அல்லாஹ் நபி ஸல்... அவர்களின் கண்ணியத்தை பாதுகாத்தான் அதனால், அங்கே இருந்தது வஹ்ஹாபி இல்லை சஹாபி.

அப்படி பாதுகாத்ததாலும், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் கட்டளைக்கேற்ப யாருடைய வாகனம் எந்த திசையில் இருக்கின்றதோ, அந்த திசையில் சென்று மார்க்கத்தை பரப்புங்கள் என்று சொன்னதாலும், அப்படி சென்ற புனித மிகு சஹாபா பெருமக்களால் உலகம் முழுதும் அந்த புனித திரு முடி வியாபித்து இருக்கின்றது. நபி ஸல்... அவர்களின் பரக்கத் பொருந்திய அந்த பொன் முகத்தை காண முடியாத இந்த பாக்கியம் இல்லா கண்களுக்கு அந்த புனித மிகு முடிகளை காண பாக்கியம் கிடைக்கின்றது. அந்த புனித முடியிற்கு முன்னாலும் சத்தம் போட்டு பேசுவது கூடாது.


எப்படி நபிகள் நாயகம் ஸல்.... அவர்களின் வாரிசுதாரர்களான சையத்மார்கள், தங்கள், மௌலானாக்கள் என்று அடையாளம் காட்டப்பட்டு, உலகம் முழுதும் இருக்கின்ற சாதாத் மார்களை அடையாளம் காட்டப்படுவதற்கு சில்சிலா என்னும் கொடிவழி ஜாபிதா பராமரிக்கப்படுகின்றதோ அதே போல நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் திரு முடிக்கும் அதை வைத்திருப்பவர்கள் அதன் சில்சிலாவை பராமரித்து வருகின்றார்கள். அப்படி இருந்தும் அந்த திருமுடிக்கு ஒரு சிறப்பும் இல்லை என்று இன்றைக்கு ஒரு கூட்டம் நமது மத்தியில் இருக்கின்றது. அவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல்... அவர்களுக்கே தெரியாத விஷயம் இவர்களுக்கு தெரிந்து விட்டதாம். கண்மணி ரசூலுல்லாஹி ஸல்... அவர்கள் பங்கு வைக்க சொன்னார்கள், நபி வழியை (!?!?!?!?!?!?) பின்பற்றும் இந்த கூட்டம் அந்த முடிக்கு ஒரு சிறப்பும் இல்லை என்று கூறுகின்றது. அந்த முடியின் சொந்தக்காரரான அபுல் காசிம் ஸல்.... அவர்களுக்கே சிறப்பு இல்லை என்று கூறும் கூட்டம் தானே! அவர்களும் நம்மை போன்றவர்கள் என்று கூறுபவர்கள் தானே!! ஆனால் நமது நிலையை பாருங்கள். ஹழ்ரத் முஹம்மத் இப்னு சீரின் ரழி... அவர்கள் ஹழ்ரத் அபீதா ரழி... அவர்களிடம் ஸல்... அவர்களின் ஒரு திருமுடியை வழங்கி விட்டு கூறினார்கள் என்னிடம் என் தந்தை சீரின் ரழி... அவர்கள் மூலம் நபிகளாரின் திரு முடி எனக்கு கிடைத்தது. ஹழ்ரத் சீரின் ரழி... அவர்கள் ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் பணியாள். ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் தாயார் ஹழ்ரத் உம்மு சுலைம் ரழி... ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் தந்தையின் மறைவிற்கு பிறகு ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களை திருமணம் முடித்து இருந்தார்கள்.

ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களிடம் இருந்த அந்த திருமுடிகளில் சிலவற்றை ஹழ்ரத் உம்மு சுலைம் ரழி... அவர்களிடம் வழங்கி இருந்தார்கள். ஹழ்ரத் உம்மு சுலைம் ரழி... அவர்களின் மூலமாக அவர்களின் மகனார் ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களிடம் வந்து, ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் மூலமாக அவர்களின் பணியாள் ஹழ்ரத் சீரின் ரழி... அவர்களுக்கு கிடைத்து, ஹழ்ரத் சீரின் ரழி... அவர்களின் மூலமாக அவர்களின் மகனார் ஹழ்ரத் முஹம்மத் பின் சீரின் ரழி... அவர்களுக்கு கிடைத்து, ஹழ்ரத் முஹம்மத் பின் சீரின் ரழி... அவர்களிடம் இருந்து ஹழ்ரத் அபீதா ரழி... அவர்கள் அந்த திருமுடியை பெற்றார்கள். ஹழ்ரத் அபீதா ரழி... அவர்கள் ஒரு தாபிஈ. ஹழ்ரத் இப்னு சீரின் அவர்கள் கனவின் விளக்கம் சொல்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். இன்றளவும் கனவிற்கு விளக்கம் அளிப்பதில் அவருக்கு நிகர் அவர்களே.



அப்படி நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் திருமுடியை பெற்றுக்கொண்ட ஹழ்ரத் அபீதா அவர்கள் கூறுவதை பாருங்கள். நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் ஒரு திருமுடி என்னிடம் இருப்பது,

أحب إلي من الدنيا و ما فيها



இந்த உலகமும், உலகில் உள்ள எல்லாவும் என்னிடம் இருப்பதை விட என்னிடம் இந்த திருமுடி இருப்பதி மிகவும் பிரியமானதாகும் என்று கூறுகின்றார்கள் (புகாரி).

அவர்களின் திருமுடியும் எனது முடி போல தானே என்று சொல்லுகின்ற துணிச்சலோ, தைரியமோ இல்லையே அவர்களுக்கு, அவர்கள் தானே சஹாபிகளும், தாபியீன்களும். வாங்கி வாங்கி பாதுகாத்தார்களே. அவர்களை தானே பின்பற்ற முடியும். அவர்களின் ஈமான் தானே சரியானது, அவர்களின் முடிவு தானே உண்மையானது. அவர்களின் வழி தானே சாத்தியமானது. ஆனால் இன்று எளிய மார்க்கம் என்றும், தூய மார்க்கம் என்றும் கூறும் இந்த மடையர்கள் இந்த மார்க்கத்தின் பரிசுத்தத்தை அசுத்தம் ஆக்க பார்க்கின்றார்கள். மேலும் இன்றைய சமீப காலமாக


ما أنا عليه و أصحابي


நானும் எனது தோழர்களும் எந்த வழியில் இருக்கின்றோமோ அவர்கள் வழியை பின்பற்றுபவர்கள் தான் சுவன வாதிகள் என்ற ஹதீஸிற்கு விளக்கம் கூறக்கூடிய போலி தவ்ஹீதின் பொய்யன் ஜெய்னுல்ஆபிதீன், நாம் தான் அந்த ஹதீஸிற்கு உரியவர்கள், நாம் தான் சுன்னத் ஜமாஅத் என்று கூறி, தன்னுடைய போலி தவ்ஹீத் என்னும் வியாபாரம் சரியாக ஓட வில்லை என்பதால் நமது கூட்டத்தின் பெயரை திருட முயற்சி செய்கின்றார் (ஏனைய 72 கூட்டங்களில் இவரும் ஒருவர் என்பதை நாம் ஒப்புக்கொள்கின்றோம் என்பது வேறு விஷயம்) அப்படி செய்யும் போது, இன்றைக்கு எந்த வழியில் இருக்கின்றோமோ அந்த வழியில் என்று தான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள். அதனால் நாம் தான் ஸல்... அவர்களின் காலத்தில் செய்வதை மட்டும் பின்பற்றுகின்றோம், பின்னால் தோழர்கள் செய்ததை பின்பற்றவில்லை என்று கூறுகின்றார்களே. நபிகளார் ஸல்... அவர்களே பங்கு வைத்து கொடுத்தார்களே, அந்த திருமுடியை இன்று பரிகாசம் செய்வது எதனால்? பதில் சொல்வார்களா?


மேலும் நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் அந்த திருமுடி ஹழ்ரத் உம்முல் மூமினீன் உம்மு சல்மா ரழி... அவர்களிடம் இருந்தது. யாரேனும் வயிற்று வழி ஏற்பட்டால் அந்த புனித முடியை தண்ணீரில் முக்கி வெளியில் எடுத்துவிடுவார்கள். அந்த புனித தண்ணீர் மருந்தாகவும் பயன் பட்டிருப்பதும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது...

இப்படி பட்ட ஒரு புனித மிகு நபி ஸல்... அவர்களின் புனித மிகு திரு முடி , (சுன்னத் ஜமாஅத்) முஸ்லிம் மக்கள் அதை கண்ணியத்துடனும், மரியாதையுடனும், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் காலம் தொட்டு பாதுகாத்து, பரக்கத்திற்காகவும், மருந்திற்க்காகவும் உபயகப்படுத்தியும் வந்துள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாக நமது அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் கோழிகோடு என்ற மாவட்டத்தில் கரந்தூர் என்ற ஊரில் செயல் பட்டுவரும் உலக பிரசித்தி பெற்ற சுன்னத் ஜமாத்தின் அரபி கல்லூரியான மார்கஸ் சக்கபாத்தி சுன்னியா என்ற கல்லூரியின் நிறுவுனர் கமருல் உலமா, அபுல் ஆய்தாம், A.P.அபூபக்கர் முஸ்லியார் (பாகவி) (DUBAI AWQAF DIECTER SHEIK HAZRAJI) அவர்கள் கடந்த வருடம் அவர்களின் பாதுகாப்பில் இது வரை பாதுகாக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் (ஸல்)திருமுடியை மர்கசிற்கு வழங்கினார். அதை பாதுகாப்பதற்கும், சுன்னத் ஜமாத்தினர் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் இந்தியாவில் மிக பெரிய மசூதியை அதன் நினைவாக ருபாய் 40 கோடி செலவில் கேரளா மாநிலத்தில் கோழிகோடு மாவட்டத்தில் மிக விரைவில் கட்ட உள்ளார்கள்.

அதன் அடிக்கல் நாட்டு விழாவும் இன்டர்நேஷனல் மிலாது விழாவும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 30 ம் தேதி நடைபெற உள்ளது. அது சமயம் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் அன்புடன் அழைகின்றோம்

எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்... நம் எல்லோரையும் உண்மையான பாதையாம் சுன்னத் ஜமா'த்தில் என்றென்றும் பாதுகாப்பானாக!

ஆமீன்!
ஆமீன்!!!
யா ரப்பல் ஆலமீன்.!!!!!

வஸ்ஸலாம்.



மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

கோவை பைசல்
09382222202,09383333303

பள்ளியின் மாதிரி தோற்றம்: