முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Monday, January 24, 2011

தலாக் - இஸ்லாமிய நடைமுறையும், PJ வின் குழப்பங்களும், அவதூறுகளும்.

தலாக் என்பது ம(ன)ண முறிவு, விவாகரத்து என்று கூறப்படும். இஸ்லாத்தில் விவாக ரத்து செய்ய ஆண்களுக்கு உரிமை இருக்கின்றது. பெண்கள் விவாகரத்து செய்ய நாடினால் அந்த பகுதியின் ஷரீஅத் நீதிபதியிடமோ, ஜமாஅத் தலைவரிடமோ முறையிட்டு, அவர்களின் வழிகாட்டுதலின் படி விவாகரத்து பெறலாம். இது அழகிய இஸ்லாமிய நடை முறையாகும்.

ஆனால் தமிழ் நாட்டில் இஸ்லாத்தில் குழப்பம் விளைவிக்கும் PJ மற்றும் அவரது கூட்டாளிகள், ஆண்கள் எப்பிடி தலாக் செய்கின்றார்களோ, அப்படி பெண்களும் தலாக் செய்யலாம் என்று இஸ்லாத்தில் இல்லாத ஒரு கருத்தை புகுத்தி இருக்கின்றார்கள்.

இதை பயன்படுத்தி தான் பெண்களை தூக்கி நிறுத்துகின்றோம் என்று கூறி கொண்டு திரியும் அவாஸ், சாயா அமைப்புகளை சேர்ந்த பதர் சயீத், நாஸ்நீன் (இவரது கொடுமை தாங்காமல் இவரது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், மேலும் இவரது ஒரு மகனை தமிழக காவல் துறையில் IG ஆக பொறுப்பேற்று இருந்த ஜனாப் கலீமுல்லாஹ் கான் என்பவற்றின் மகளை திருமணம் செய்து அவரை சொல்லனா துயரத்தை தந்தார். மேலும் வரதட்சணை கொடுமையையும் மேற் கொண்டார்), புதுக்கோட்டையை சேர்ந்த ஷெரிபா (இவர் ஒரு வார இதழில் தனது கணவரை மூன்று தலாக் கூறி விட்டேன் என்று கூறினார்) எல்லாம் ஆண்கள் கூறும் தலாக் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று நீதிமன்றங்களில் முறையிட்டு அது அல்லாஹ்வின் மாபெரும் அருளால், தமிழக உலமா சபையின் முயற்சியால் முறியடிக்கப்பட்டது என்பது வேறு விஷயம்.

இப்படி பட்ட அயோக்கியர்கள் உருவாக இந்த PJ தான் காரணம். மேலும் இந்த PJ நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் காலத்தில் இருந்த முத்தலாக் நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரே ஒரு ஹதீஸை மட்டும் வைத்துக்கொண்டு கூறுகின்றார். அதாவது நபிகள் நாயகம் ஸல்... அவர்களுக்கு பின்னும், ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரழி... அவர்கள் காலத்திலும், ஹழ்ரத் உமர் ரழி... அவர்கள் காலத்திலும் தலாக் என்பது ஒன்றாக தான் கவனிக்கப்படும் என்ற ஹதீஸை கூறி தலாக் மூன்று சொன்னாலும் ஒன்று என்று கூறுகின்றார்.

அதற்கு ஒரு விசித்திர காரணத்தையும் கூறுகின்றார். அதாவது ஒரு மனிதர் தனது மனைவியை முத்தலாக் செய்தால், முதலில் ஒரு தலாக் சொல்கின்றான், அப்போதே அவனுக்கு அவள் மனைவி இல்லாமல் ஆகி விடுகின்றாள். பின் எப்பிடி இரண்டாவது, மூன்றாவது கூற முடியும் என்று கேட்கின்றார். அதனால் அவன் ஒரு தலாக் சொல்லி, பிறகு வாபஸ் வாங்கி சேர்ந்து வாழ்ந்து, பிறகு தலாக் சொல்லி, நிக்காஹ் மீண்டும் செய்து சேர்ந்து வாழ்ந்து, பிறகு தலாக் சொன்னால் தான் தலாக் ஆகும். இது தான் முத்தலாக். இதற்க்கு மாற்றமாக எப்பிடி செய்தாலும் அது நபி வழிக்கு மாற்றமானது ஆகும் என்று எங்கு பார்த்தாலும் இந்த விஷயத்தை கூறி, மத்'ஹபின் ஆலிம்கள் எப்பிடி உங்களை எமாத்துறாங்கே (அவர் பாணி) பார்த்தீர்களா என்று கேட்டு மத்'ஹபின் பக்கம் அவதூறு கூறி மக்களை திசை திருப்புகின்றார்.

அவரது கேள்விகளில் இருந்து, இந்த கேள்வியை அவரிடம் நாம் கேட்கின்றோம், ஒரு மனிதன் தனது மனைவியை, ஒரு தலாக் செய்கின்றார் அவள் திருந்தி வர வில்லை, மூன்று மாதம் ஆகி விட்டது, இப்போது எப்பிடி அவளை மீட்காமல் தலாக் சொல்வது? (தலாக் சொல்லாவிட்டாலும் தானாகவே இரண்டாவது தலாக் விழுந்து விடும் என்பது வேறு விஷயம்) அப்படியே தலாக் சொன்னால் உங்கள் வாதப்படி அவள் மனைவியே இல்லையே அப்படி என்றால் தலாக் சொன்ன ஒரு மனிதன் மீட்டு மீண்டும் குடும்பம் நடத்தி தான் தலாக் சொல்ல முடியும் என்பது எப்பிடி சாத்தியம். அவள் திருந்தி வராவிட்டால் என்ன சட்டம். இதற்கு PJ பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஆனால், இதற்கு PJ வால் பதில் சொல்ல முடியாது என்பதே உண்மை. மேலும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம், இந்த மத்'ஹப் காரங்கே (அவர் பாணி), இந்த மத்'ஹப் ஆலிம்கே முத்தலாக் இருக்கு னு சொல்றாங்கே, ஆனா அவுங்கே குடும்பத்துல, அவுங்கே பொண்ணுங்களுக்கு முத்தலாக் சொல்லப்பட்டால், அவர்களின் சகோதரிகளுக்கு முத்தலாக் சொல்லப்பட்டால் அதை ஒரு தலாக் தான் என்று பத்வா வாங்குவதற்காக நஜாத் காரனிடம் செல்லுங்கள் என்று எங்களிடம் அனுப்பி, எத்தனை பேர் எங்களிடம் வந்து பத்வா பெற்று இருக்கின்றார்கள் தெரியுமா என்று அவரை சார்ந்து இருக்கும் மடையர்களிடம் பீற்றிக்கொள்கின்றார். மேலும் எத்தனை உலமாக்கள் என்னிடம் வந்து நீ பத்வா கொடு நாங்கள் சேர்ந்து வாழுகின்றோம் என்று கேட்டீர்களா இல்லையா என்று கேட்கின்றார். ஏன் கேட்டீர்கள்? உங்களுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?

அது அவரது சீடர்களுக்கு சரி என்று படலாம். காரணம் நித்யானந்தாவின் லீலைகள் மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டும் அவருக்கு என்று இருந்த சீடர்கள் அவரை நம்பினார்கள். இஸ்லாத்தின் நித்யானந்தா இவர்.



PJ முத்தலாக்கை கூறும் ஹதீஸை மறைத்தும், நமது உலமாக்களின் மீது அவதூறும் இட்டுக்கட்டியும் பேசும் வீடியோ:

அவர் நமது ஆலிம்களை நோக்கி சொன்ன பொய் குற்றச்சாட்டு தான் இது. அவர் உண்மையான மூமினாக இருந்தால், எந்த ஆலிம் இப்படி தனது குடும்பத்தவரை அனுப்பினார், எந்த ஆலிம் இவரை தேடி வந்தார்? என்று அவர்களது முழு விவரத்தையும், அவரது பெண்களின் முழு விவரங்களையும் நமக்கு அனுப்ப வேண்டும். நாம் பிறகு அவரை தொடர்பு கொள்வோம். பிறகு இவர் சொன்னது பொய் என்பதை நிரூபிப்போம். அவர் உண்மையாக மத்'ஹபை சேர்ந்தவராக இருக்க வேண்டும். பொய்யாக, செட் அப் செய்து அந்த தொடர்பு விவரங்களை தரக்கூடாது.

பத்து நாட்கள் PJ விற்கு அவகாசம் தருகின்றோம். அதற்குள் அவர் விபரங்களை தரவேண்டும். இல்லாவிட்டால் சொன்ன அந்த விஷயம் பொய், மோசடி என்பதை நாம் எழுதுவோம்.

மேலும் தமிழகத்தின் தாய் மதரசாவான பாகியாதுஸ் சாலிஹாத் ஐயும், லால்பேட்டை மன்பவுல் அன்வாரையும், நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா வையும், இப்படி சாடுகின்றார். அதாவது மக்களுக்கு ஒரு சட்டத்தை சொன்னீர்கள், உங்களுக்கு என்று வந்து விட்டால் பல்டி அடித்து விட்டீர்களே, ஏன்? தனக்கு என்று வந்தால் தான் தெரியும். மூன்று முறை தலாக் என்று சொன்னால் மூன்றும் விழுந்து விடும் என்று சொன்ன நீங்கள் இப்போது ஏன் மாறினீர்கள்? இப்போது மத்'ஹபின் சட்டம் என்னவானது என்று கேட்கின்றார்.

அப்படி பாகியாத்துஸ் சாலிஹாத்தில் நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அல்லாஹ்விற்கு பயந்து அதற்க்குண்டான ஆதாரத்தை தரவேண்டும். அதற்கும் பத்து நாட்கள் அவகாசம் தருகின்றோம். அந்த ஆதாரத்தையும் சமர்பிக்க வில்லை என்றால் இவரின் முகமுடியை மேலும் கிழிப்போம். அப்படி ஆதாரங்களை தர முடியாது என்பதே உண்மை. ஆனால் அதே நேரத்தில் முத்தலாகை எத்தனை வஹ்ஹாபியர்கள் ஒரே நேரத்தில் நமது ஜமாஅத் களில் வந்து கேட்கின்றார்கள் தெரியுமா? அப்படி தலாக் செய்த வஹ்ஹாபியின் கடிதமும் நம்மிடம் ஆதாரமாக உள்ளது.


மேலும் தனது கணவரை முத்தலாக் சொன்ன புதுக்கோட்டையை சேர்ந்த ஷெரிபா தலாக் என்பதே இருக்க கூடாது என்று நீதி மன்றம் ஏறிய சாயா, அவாஸ் அமைப்பை சேர்ந்தவர்.
அவர் தனது மகளுக்கு சரியான வாழ்க்கை அமையவில்லை என்பதற்காக, நீதி மன்றத்தில் முறையிட்டு அங்கு தீர்வு கிடைக்காமல், தமிழ்நாடு (போலி) தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களிடம் முறையிட்டு அங்கும் தீர்வு கிடைக்காமல், மதுரை அரசாங்க தலைமை காஜியாரிடம் முறையிட்டுள்ளார் என்ற செய்தி நமக்கு சேர்ந்த போது இவர்களின் சுய ரூபம் தெரிகின்றது. PJ சொன்ன சட்டம் அதாவது தனக்கு என்று வந்தால் ஒரு சட்டம் என்பது அவர்களுக்கு தான் பொருந்தும் என்பதை உறுதி படுத்தி கூறுகின்றோம்.

இதே தான் PJ வின் நிலையாகவும் இருக்கும். மேலும் ஆண்களுக்கு ஒவ்வொன்றாக தான் தான் தலாக் வழங்க முடியும் என்று கூறும் PJ, பெண்கள் மட்டும் ஒரேயடியாக மன முறிவு பெற முடியும் என்று கூறுகின்றார். இது எப்பிடி முடியும்? சட்டம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்று என்று தானே சென்னையில் நடந்த மூன்றாவது விவாதத்தில் கூறினார்! அப்படி இருக்கும் போது எப்பிடி இதில் மட்டும் விதி விலக்கு ஏற்படுகின்றது.

மேலும் மத்'ஹபின் ஆலிம்கள் PJ வின் பத்வாவை கேட்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை. இவரிடம் வந்து பத்வா கேட்டார்களாம் யாரிடம் புளுகுகின்றீர். உங்களுக்கு பத்வா கொடுக்க என்ன அதிகாரம் இருக்கின்றது. உங்களின் பத்வா வை போல ஆலிம்கள் கொடுத்துகொள்வார்களே. அவர்களுக்கும் அந்த ஹதீஸ்கள் தெரியுமே? உங்களிடம் தான் வந்து பத்வா பெற வேண்டும் என்று என்ன தேவை இருக்கின்றது என்பதையும் மக்கள் மன்றம் விளங்கி கொள்ள வேண்டும். இது மக்களை வழி கெடுக்க இவர் செய்யும் சூழ்ச்சிகளில் ஒன்று என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இது தான் ஒரு பக்கம் என்றால், முத்தலாகின் சட்டம் என்ன என்று ஹதீஸ்களை ஆராய்கின்ற போது, ஏராளமான ஹதீஸ் வருகின்றது. அதில் ஒரு ஹதீசாகின்றது, ஒரு மனிதர் (ஒரே நேரத்தில்) தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி விடுகின்றார், அந்த பெண் மற்றொரு நபரை மணம் செய்து கொள்கின்றார். அவரும் (மூன்று முறை) தலாக் விட்டு விடுகின்றார், நபிகள் நாயகம் ஸல்... அவர்களிடம் மக்கள் வந்து இப்போது முதல் கணவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்ட போது, இரண்டாம் கணவர் அந்த பெண்ணை உறவு கொள்ளாதவரை அது முடியாது என்று கூறினார்கள் (புகாரி).

அதே போல ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி... அவர்களிடம் ஒரு மனிதர் நான் என் மனைவியை நூறு முறை தலாக் விட்டு விட்டேன் என்று கூறி, இப்போது எனது தலாக்கின் நிலை என்ன என்று கேட்ட போது அவள் மூன்று தலாகால் விடுவிக்கப்பட்டு விட்டாள். மீதி 97 தடவை நீர் அல்லாஹ்வின் வசனத்தோடு போர் புரிந்துள்ளீர் என்று கூறினார்கள்
(முஅத்தா மாலிக்).


அப்படி என்றால் அல்லாஹ்வின் வசனமும் முத்தலாக் ஐ பற்றி கூறி இருக்கின்றது, நபிகளாரின் வாழ்க்கையும் காட்டி தந்துள்ளது. சஹாபாக்களின் கூற்றும் எடுத்துக்காட்டுகின்றது, இமாம்களின் சட்டங்களும் அதை ஆமோதிக்கின்றது, PJ வின் கூமுட்டை அறிவு மட்டும் எதிர்க்கின்றது என்றால் அல்லாஹ்விடமும், அவனது ரசூலிடம் போர் புரிவது என்பதை தான் காட்டுகின்றது. (அழகிய நடைமுறை என்பது ஒவ்வொன்றாக கூறுவது தான். ஆனால் மூன்று கூறி விட்டால் அது மூன்றா ஒன்றா என்பது தான் பிரச்சனை). (இவர் இப்படி நாம் காட்டும் ஹதீஸை மறுக்கலாம், காரணம் இவர் தான் தற்போது பலமான ஹதீஸை கூட நம்பும் இடத்தில் இல்லையே?)

இப்படி பட்ட விஷயங்கள் வைத்து ஹழ்ரத் உமர் ரழி.... மூன்று மூறை கூறினால் மூன்று முறை தான் என்று லட்சோப லட்ச சஹாபா பெருமக்களுக்கு மத்தியில் ஒரு சட்டத்தை கொண்டு வருகின்றார்கள். எந்த சஹாபியும் இதை எதிர்க்கவும் இல்லை. இது நபிகளாரின் நடைமுறைக்கு மாற்றம் என்று அறிவிக்கவும் இல்லை. அப்படி இருக்க இவர் மட்டும் இந்த சட்டத்தை எதிர்க்கின்றார் என்றால் இவரின் உண்மை முகத்தை மக்கள் மன்றம் அறிந்து கொள்ள வேண்டும். இது நபிகளார் ஸல்... அவர்களின் காலத்தில் இருந்த நடைமுறையே தவிர வேறில்லை. இதை மாற்றுவதற்கு யார் முயற்சி செய்தாலும் அது தடுக்கப்பட வேண்டும். நபிகளார் ஸல்... அவர்களின் சட்டத்தை பின் பற்றி நடக்கும் தவுபீகை அல்லாஹ் நமக்கும் நமது சந்ததியினருக்கும் என்றென்றும் தந்தருள்வானாக!

ஆமீன்! ஆமீன்!

யா ரப்பல் ஆலமீன்.




1 comments:

ஷாஹுல் said...

மிகவும் தெளிவாக, விளக்கமாக குழப்பவாதிகளை அனைவருக்கும் அடையாளம் காட்டி உள்ளீர்கள் ... இவர்கள் என்றும் உண்மையான ஆதாரங்களை மக்களிடம் கொண்டு செல்ல மாட்டார்கள். தற்போது இவர்களுடைய தலையாய கடமை கண்மூடித்தனமான கூட்டத்தை சேர்ப்பதும் அதன் மூலம் ஆதாயம் தேடுவதும் மட்டுமே.. இதுவரை PJ வை தவிர யாருமே இஸ்லாத்தை தெரியாதவர்கள் போல மார்தட்டி கொண்டு அலைகிறார். ஆணவத்தின் உச்சியில் இருக்கும் இவருக்கு எல்லாம் வல்ல அல்லா நேர் வழியை காட்டுவானாக.
சலாம்