முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Wednesday, January 19, 2011

நீடூர் மருத்துவக் கல்லூரியும் வஸ்வஸாவை போடும் மனித சைத்தானும்

இறைமறை குர் ஆனில் அல்லாஹ் கூறுவது போல் மனித உள்ளங்களில் சந்தேகவிதைகளை விதைக்கும் சைத்தான்கள் மனிதர்களிலும் உண்டு என்பதற்கு சரியான உதாரணம், பீ.ஜை எனப்படும் பீ.ஜைனுலாப்தீன்.

தன்னை அங்கீகாரம் செய்யாத இயக்கங்களானலும் சரி,மார்க்க மேதையானலும் சரி, ஜமாத்தானாலும் சரி, தனி மனிதராயினும் சரி அவர்கலைப்பற்றி அவதூறு பரப்பி சமுதாயத்தினரை குழப்புவார்.

அதற்கு சரியான சமீப உதாரணம் நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா வக்ப் மருத்துவக்கல்லூரி விவகாரம். உண்மை என்னவென்று தெரிந்தும் அதனை மறைத்து மருத்துவக் கல்லூரி உருவாகிவிடக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் தங்களிடமிருந்து திருடி விட்டார் என ஒரு இயக்கம் குற்றம் சாட்டிய உணர்வு இதழில் சில சந்தேக விதைகள விதைத்துள்ளார்.

உண்மை என்னவென்று தெரிந்தும் அதனை வெளியே சொல்லமல் மறைப்பவன் ஊமை சைத்தான் என நபி(ஸல்) கூறினார்கள் இப்போது உண்மை என்ன என்பதையும் தெரிந்தும். பீ.சை சாரி பி.ஜை அதனை மறைத்து சந்தேக விதைகளை விதைத்துள்ளார்.

உண்மையை மறைக்கும் ஊமை சைத்தான்

மருத்துவக் கல்லூரி துவக்குவது தொடர்பான முதல் ஆலோசனக்கூட்டம் நீடுரில் நடத்த முடிவு செய்ய முடிவான பொழுது விளக்கம் தர நீடூர் மதரசாவுடன் தொடர்புடைய மூன்று பேர்களின் தொலைபேசி எண்கள் நீடுர் ஆன்லைன் டாட் காம் என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டது.

நன்றாக கவனியுங்கள் செய்தி தொடர்புக்கு என்று கொடுக்கப்பட்டதே தவிர மருத்துவக் கல்லூரிக்கு இவர்கள் தான பொறுப்பாளர்கள் என அறிவிக்கப்படவில்லை. ஒரு நிருவனத்திற்கோ, இயக்கத்திற்கோ ஒருவரை செய்தி தொடர்பாளர் என அறிவிக்கப்பட்டால் தொடர்புடைய அந்த நிறுவனத்திற்கு அவர்தான் முழு பொறுப்பாளராகி விடுவாரா? அவர்களை மட்டும் நம்பி பல கோடிகளை மக்கள் கொடுத்து விடுவார்களா?

இந்த உண்மை தெரிந்தும் சந்தேக விதைகளை மக்கள் உள்ளத்தில் விதைக்கிறார். அவரின் சைத்தானிய உணர்வலைகள் இப்படி வெளிப்படுகிறது. "எஸ்கொயர் சாதிக், இஸ்மாயில் நாஜி, ஜர்ஜிஸ் ஆகிய மூவரின் செல்போன்கள் தொடர்பு எண்ணாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை தொடர்பு கொள்ளும் போது ஒவ்வொருவரும் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றனர்.

இவர்களிடம் விசாரிக்கும்போது மருத்துவ கல்லூரியை வக்ப் வாரியம் நடத்துவதாகக் கூறாமல் மக்களிடம் ஷேர் சேர்த்து தனி டிரஸ்டாக நடத்த இருப்பதாகக் கூறுகின்றனர். இது வக்ப் வாரியத்தால் நடத்தப்படுகிறதா என்று கேட்கும் போது இல்லை. நாங்கள் தனியார் நடத்துகிறோம். கவிக்கோ அப்துர்ரஹ்மான் முதல்வரிடம் செல்வாக்கு பெற்றவராக உள்ளதால் அவர் பெயரைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

வக்ப் வாரியத்தலைவரின் பெயரைப் பயன்படுத்தி யாரோ சிலர் உள் வேலை செய்வதாக எழுந்துள்ள சந்தேகத்தை வக்ப் வரியம் நீக்கவேண்டும்"

கவிக்கோ அவர்களை ஏன் தொடர்பு கொள்ளவில்லை?

சகோதரர்களே! பொதுவாக புலனாய்வு இதழ்கள் எனப்படும் ஜூனியர் விகடன் போனறவைகள், ஒரு செய்தியை வெளியிடும் பொழுது, குறிப்பாக மோசடி போன்ற செய்திகளை வெளியிடும்போது தொடர்புடைய அனைவரின் கருத்துகளையும் பதிவு செய்வார்கள்.

பீ.ஜை.என்ற பீ.ஜைனுலாப்தீன் உண்மயான சமுதாய அக்கரை இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? வக்ப் வரியத் தலைவரின் பெயரை யாரோ சிலர் தவறாக பயன்படுத்திகிறார்கள் என சந்தேகம் வந்தவுடன் வாரியத் தலைவர் கவிக்கோ அவர்களைத் தொடர்பு கொண்டு அவரின் கருத்தையும் கேட்டு வெளிட்டிருக்கவேண்டும்.. தொடர்பு கொள்வதற்காக கொடுக்கப்பட்ட செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு கேட்க தெரிந்த இந்த மே(ல்)தாவிக்கு கவிக்கோ அவர்களைக் கேட்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

உண்மை என்னவென்று தெரிந்தே மக்களைக் குழப்புவதுதானே அவர் நோக்கம்.இதை நாம் உறுதி பட கூறுவதன் காரணம்"

தெரிந்தே வழிகெடுக்கும் சைத்தான்

தனது சைத்தானிய உணர்வலைகளின் துவக்கத்தில் மருத்துவக் கல்லூரி தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிடுகிறார். ஆலோசனைக் கூட்டங்கள் நடப்பது தெரிந்த அவருக்கு அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனைத்தும் கவிக்கோ அவர்களின் கையெப்பத்துடன் அனுப்பப்பட்டது என்பதும், அந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியதும் வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ அவர்கள்தான் என்பதும் பீ.ஜை க்குத் தெரியாதா?.

பீ.ஜை. என்னென்ன சந்தேகங்களை எழுப்பி உள்ளாரோ அத்தனைக்கும் பதில் கவிக்கோ அவர்களின் உரையிலேயே இருக்கிறது.

மருதுவக் கல்லூரி வக்ப் வாரியம் நடத்துகிறதா, இல்லை தனியார் டிரஸ்ட்டா? என்ற கேள்வியை இவர் எழுப்புவது டிசம்பர் 22 ந்தேதி வெளியான உணர்வு இதழில், அந்த இதழ் வெளிவருவதற்கு 18 நாட்கள் முன்பாகவே அதற்கு கவிக்கோ பதில் வழங்கி உள்ளார்.

04/12/2010 சென்னையில் வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. அதில் பல கல்வியாளர்கள், ஆடிட்டர்கள், செல்வந்தர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் மிகத் தெளிவாக கவிக்கோ கீழ் கண்டவாறு கூறினார்கள்:

மிஸ்பாஹுல் ஹுதா வக்ப் மருத்துவக் கல்லூரியை வக்ப் வாரியமோ, மிஸ்பாஹுல் ஹுதா மதரசாவோ நடத்தவில்லை, மாறாக பத்து லட்சம் ரூபாய் ஷேர் வாங்குபவர்கள் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்கள். முழுக்க முழுக்க நமது சமுதாய மக்களிடம் பங்கு வாங்கப்பட்டு பங்குதாரர்களை கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட்டு பொதுக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மன்ற குழுவினரே மேற்படி கல்லூரியை நடத்தப்போகிறார்கள், என தெளிவாக அறிவித்தார்கள்.

அந்தக் கூட்டத்தின் நிகழ்வுகள் சன் டிவி போன்ற தொலைகாட்சியிலும், தினசரி நாள் இதழ்களிலும் வெளி வந்தன.

இவைகள நன்கு அறிந்தும் பீ.ஜை வக்ப் மருத்துவ கல்லூரி என்ற பெயரில் சமுதாயம் ஒன்று படக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் மனித சைத்தானாக சந்தேக விதைகளை விதைக்கிறார்.

மருத்துவக் கல்லூரியை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு அதனை முன் நின்று உழைப்பவர்களின் மீது சமுதாயம் நம்பிக்கை இழக்க வைக்க வேண்டும் என அவரின் சைத்தானிய மூளை வேலை செய்கிறது.

வாரியத் தலைவர் கவிக்கோ அவர்களின் மீது ஏற்கனவே ஊழல் புகார் கூறி வழக்கு என்றதும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

மருத்துவக் கல்லூரி தொடர்பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நீடூரில் நாகை, தஞ்சை, கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட மக்களை அழைத்து நடத்த முடிவு செய்த பொழுது தொடர்பு கொள்வதற்காக மூன்று பேரின் அலைபேசி எண்கள் நீடூர் ஆன்லைன் டாட் காம் எனும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது

இதில் எஸ்.ஏ.சாதிக் மிஸ்பாஹுல் ஹுதா மதரசாவின் பொது செயலாளர். மற்ற இருவர் மதரசாவின் நிர்வாக குழு உறுப்பினர்கள்.

முளையிலே இந்தத் திட்டத்தை கிள்ளிவிட வேண்டும் என்ற சைத்தானிய திட்டத்தில் மக்களின் உள்ளத்தில் அவ நம்பிக்கை ஏற்படும் வகையில் மக்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை போடும் சைத்தான்கள் ஜின்களிலும்.மனிதர்களிலும் உண்டு என குர் ஆன் (114:5-6) கூறுவதற்க்கேற்ப சாதிக் அவர்களைப் பற்றியும். இஸ்மாயில் நாஜி பற்றியும் மக்கள் உள்ளங்களில் சந்தேக விதைகளை விதைக்க முனைகிறார்.

குற்றஞ்சாட்டுவதற்கும் ஒரு ஆண்மை வேண்டும், ஆனால் இவர் பெட்டைத்தனமாக புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது, என எழுதுகிறார்.

அவதூறு பரப்புவதை பெறும் பாவமென அல்லாஹ் அந்நூர் அத்தியாயத்தில் விரிவாக கூறியுள்ளான். இவர் உண்மையான ஈமான் கொண்டவராக இருந்தால் ஆணித்தரமாக குற்றம் நடைபெற்றதாக எழுதிருக்க வேண்டும், அதைவிட்டு சைத்தான் போடும் வஸ்வஸாவைப் போல் புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது என ஏன எழுத வேண்டும்?

இதில் அல்ஹாஜ் S.A.சாதிக் அவர்கள் மயிலாடுதுறை பகுதியில் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத மக்களிடம் மரியாதைக்குறியவர். தொழிலதிபர். பொருளாதாரத்தில் நலிவுற்றிருந்த மிஸ்பாஹுல் ஹுதாவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் அதனை பொருளாதாரத்தில் தன்னிறவு பெறச்செய்தவர். அதனால்தான் மதரசா பொது குழுவினரால் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பொதுசெயலாளராக இருக்கிறார்.

பள்ளிவாசல் நிதி மோசடியைப் பற்றி இவரிடம் கூறியவர்கள் ஏன் நீடூர் ஜமாத்தில் புகார் கூறவில்லை? தலைவரைப் போன்று அவர்களும் பெட்டைகளா? பீ.ஜைக்கு ஆண்மை இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பொழுது முன் நின்று குற்றத்தை நிரூபிக்கட்டும்.

அடுத்து, இஸ்மாயில் நாஜியின் மீது வேறுவிதமான புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது என எழுதியுள்ளார். ஏற்கனவே இதே உணர்வு இதழில் நாஜியின் வண்டவாளங்களை வண்டி வண்டியாக எழுதலாம் என எழுதினார். அவர் உண்மையிலேயே ஆண்மை உள்ள முஸ்லிமாக இருந்தால் குறிப்பிட்டு ஏதேனும் குற்றச்சாட்டை முன் வைக்கட்டும், இவ்வுலகில் இங்குள்ள நீதி மன்றத்திலும். மறுமையில் அல்லாஹ்வின் மன்றத்திலும் வழக்கு தொடர்ந்து வென்று காட்ட தயாராக இருக்கிறார்.

இன்று நாஜிக்கு 63 வயதாகிறது. 40 ஆண்டுகளாக நீடூர் மக்களுக்குடன் தொடர்பு வைத்திருப்பவர். சிதம்பரத்தில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிரார்.சிதம்பரம் பகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். சிதம்பர்ம் தாலூக்கா இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் தலைவராக இருப்பவர். தமிழ்நாடு உலமாக்கள் மற்றூம் பணியாளர் வாரியத்தின் உறுப்பினர். அவரைப் பற்றிய இவரின் வஸ்வஸாக்கள் மக்களிடம் எடுபடாது.

உங்களைப் பற்றி உணர்வு இதழில் தவறாக எழுதப்பட்டது என்ற தொலைபேசி தகவல் வந்தபோது அல்ஹம்துலில்லாஹ் என மகிழ்ச்சி தெரிவித்தார். காரணம், பீ.ஜை.யின் நாசகார நாவினால் அவதூறு கூறப்படாத நல்லவர்களே இல்லை.

உலமாக்கள் தொடங்கி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இமாம்கள், வலிமார்கள், நபி தோழர்கள் வரை அனைவரின் மீதும் அவர் அவதூறு கூறியுள்ளார், அந்த பட்டியளில் நாஜி யை சேர்த்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாகத்தான் அவர் கருதுகிறார்.

ஏனென்றால் ஒரு முறை அவரின் குரு கூறினார்" நல்லவர் ஒருவர் உன்னைப் பற்றி வருத்தப்பட்டால் கவலைப்படு. ஏனென்றால் நல்லவர் வேதனைப்படும் ஏதோ கெட்ட செயல் உன்னிடம் இருக்கிறது.அயோக்கியன் ஒருவன் கோபப்பட்டால் சந்தோசப்படு! அவன் கோபப்படும் ஏதோ நல்ல குணம் உன்னிடம் இருக்கிறது என்று பொருள்" என்றார்கள்.

பீ.ஜை ஒருவரைக் குறை கூறுவது அதிசயமல்ல, எனென்றால் இவரின் முன்னாள் சகா ஒருவார் தனது இணையதளத்தில் எதிர்த்து கேள்வி கேட்கும் எவரும் இருக்கக் கூடாது என்பதற்காக தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக முந்திக்கொண்டு மற்றவர்கள் மேல் பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகளை கூறும் இவர் ":இரண்டு விஷயத்தை யார் மீது எறிந்தாலும் அவன் காலிம்மா! ஒன்று பொம்பள, இன்னொன்று பொருளாதாரம்,” என்று கூறுவது இவரின் கொள்கையாகும் என்று எழுதுகிறார்.

என்வே அவர் மருத்துவக் கல்லூரியை ஆதரித்து இருந்தால்தான் அதிசயம். மனித உள்ளங்களில் தெரிந்தே வஸ்வஸாவை சைத்தான் போடுவதிலிருந்தே நாம் போகும் பாதை சரியானது என்று நம்பலாம். என்வே இந்த மனித சைத்தான் என்னதான் முயன்றாலும் இந்த நல்ல காரியத்தை தடுக்க முடியாது.

இவ்வளவு பேரையும் குறை கூறும் இவர் என்ன குறைகளற்ற கோமேதமா? மாசற்ற மாணிக்கமா? பத்தரை மாற்று தங்கமா? பரிசுத்த ஆத்மாவா என்றால் சாதாரண கிளை நிர்வாகிக்கு உள்ள இஃலாஸ், தக்வா, ஒழுக்கம், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், இபாதத் என எதுவும் இவரிடத்தில் இல்லை என இவரின் முன்னாள் சகாக்களே கூறுகின்றனர்.

நித்யானந்தா, பிரமானந்தா போன்ற சாமியர்களை விட மோசமானவர் என்றும், தன் குடுப்பத்தின் பொருளாதரத்தை வள்ப்படுத்த ஜமாத்தை எப்படி பயன் படுத்துகிரார் என்றும் இணைய தளங்களில் எழுதியுள்லனர்.

என்வே பீ.ஜை எனும் பீ.ஜைனுலாப்தீனுக்கு சொல்லிக் கொள்கிரோம்... கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிய வேண்டாம். மயிலாடுதுரை அருகே பெரம்பூர் எனும் சின்ன கிராமத்தில் மளிகைக் கடை நடத்திக் கொண்டு, தொடை தெரிய தெரு ஓரங்களில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவர், அபூஅப்துல்லாஹ் தொடங்கி பாக்கர் வரை அவரை ஏற்றி விட்ட ஏணீகளை காலில் தள்ளி இண்று பொருளாதாரத்தில் எப்படி தன்னனிரவு பெற்றுள்ளார் என்பதனை வெளி இடநேரிடும்.


நன்றி : KTIC

0 comments: