முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Wednesday, July 28, 2010

போலி தவ்ஹீதின் உண்மை முகம்

சென்னை விவாதம் சுன்னத் ஜமாஅத்திற்கு வெற்றி - ஓர் ஆய்வு

தவ்ஹீதை போதிக்க வந்த இஸ்லாத்தில் உருவ வழிபாடா? நவூதுபில்லாஹ்! இதை பின்பற்ற ஒரு வழிகேட்டுக்கூட்டமா? இதற்கு ஒரு வழி கெட்ட தலைவரா? இது தான் தூய மார்க்கம் பேணும் லட்சணமா இல்லை தூய இஸ்லாத்தின் கொள்கையை தகர்க்கும் கொள்கையா? அல்லாஹ்விற்கு உருவமா? யூதர்களின் கைப்பாவைகள் தான் இவ் வாஹ்ஹாபிகள் என்பது மிகவும் சரியாக தெரிகிறது, அல்லாஹ்விற்கு உருவம் இல்லை என்று பி ஜே ஒரு ஆதாரமும் சொல்லவே இல்லேயே? சில இடத்தில் நம்முடைய அர்த்தம் கொடுத்த பீ ஜே விற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை என்று சொல்லாமல் சொன்னதற்கு நன்றி, அதாவது முதலாம் வானத்திற்கு அல்லாஹ் வரவில்லை அது அருள் என்பதும், அவர்களுடைய தர்ஜுமா வில் கண்ணிற்கு பார்வை என்று ஒத்துக்கொண்டதற்கும், மறுமையில் எல்லாம் அழியும் அல்லாஹ்வின் முகம் மட்டும் இருக்கும் என்பதற்கு சுன்னத் ஜமாத்தின் அர்த்தமான உள்ளமை என்று ஒத்துக்கொண்டதற்கும், நன்றி. அதே போல மரியாதை இல்லாமல் பேசிய நபரின் கேள்வி யை யே புறக்கணித்து வேறு நபரை கேள்வி கேட்க வைத்து அதற்கு பதில் அளித்த ஜமாலி இது தான் நபியில் வழி என்பதை காட்டி விட்டார், பீ ஜே யோ ஒருமையில் திட்டியவனுக்கு பதில் கூறி எங்களுக்கும், நியாயத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபித்து இருக்கின்றார், நபி வழிக்கும் எங்களுக்கும் தொடர்பே இல்லை என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்.


அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சென்னை விவாதத்தில் வாதிட்டவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் தடுமாற்றம் உள்ளவர்கள் என்று நன்றாக தெரிகிறது, காரணம் ஒரு மாற்று மத சகோதரர் இஸ்லாத்தில் உருவ வழிபாடு கிடையாது உட்பிரிவு நிறைய இருக்கு அதை பற்றி என்று கேட்கின்றார், அதில் ஒரு இடத்திலும் அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது என்று சொல்லவே இல்லை,



அந்த கிளிப் ஐ பாருங்கள்,





மேலும் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதை பார்க்கும் போது இவர்களின் 25 வருட பொய் பிரசாரம் தோல்வியில் முடிந்து இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது, இஸ்லாத்திற்குள் புகுத்திய நச்சுக்கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. மக்கள் தற்போது இந்த இயக்கத்தில் இருந்து வெருண்டு ஓடுகிறார்கள் என்பது இவர்களின் அறிவிப்பிலிருந்து தெரிகிறது.

உடல் சுத்தம் இல்லாவிட்டாலும் குர்ஆனை தொடலாம் இது தான் தூய மார்க்கமா?, தூய மார்கத்தை கிண்டல் செய்வதை போல் உள்ளது. அதே போல அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் வலிமார்களை கண்ணியம் செய்தால் தவறு என்று சொல்லும் (போலி)தவ்ஹீத் வாதிகள், அல்லாஹ்விற்கு உருவம் கொடுத்து தவ்ஹீதிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை, உண்மையான ஷிர்க் வாதிகள் நாங்கள் என்று மார்தட்டுவதை பார்க்க பார்க்க இப்படி தான் அல்லாஹ் கடைசி கால மக்களை வழிகெடுப்பான்.

மக்களுக்கு மத்தியில் இமாம்களின் ஆய்வுகளை குப்பை என்றும் பின் பற்ற தேவை இல்லை என்றும் சொன்னவர்கள் இன்றைக்கு ஆய்வு செய்ய கிளம்பி இருக்கின்றார்கள் (கிளம்பிட்டாங்கயா...... கிளம்பிட்டாங்கயா...........)


இவர்கள் ஆய்வு செய்து மார்கத்திருக்கு பிரோஜனம் என்ன? இவர்களின் bank balance தான் கூடி இருக்கிறது.

25 வருட பிரசாரம் தோல்வியில் முடிந்து விட்டதை, உண்மை தான் ஜெய்க்கும் என்பதை உணர்ந்து கொண்டவர் சமுதாய பிரச்சனையில் இருந்து 6 மாத ஓய்வை அறிவித்து உள்ளார். மற்ற விஷயங்களில் இவர்களின் போலியான தந்திரமான கவர்சிகரமான பேச்சுக்களில் கவரப்பட்டவர்கள் அல்லாஹ்விற்கு உருவம் உள்ளது என்று சொல்லும் போது இவர்களை விட்டு விலகி விட்டார்கள் என்பதை சென்னையில் நடந்த இரண்டாவது விவாதமே சாட்சி.

இவர்களுடைய (நிரந்தர) ஓய்வு கடிதம் இதோ:


கடந்த காலங்களில் கிறிஸ்துவர்கள் விரும்பி சாப்பிடும் "பன்றியின் எலும்புகளைச நாமும் சாப்பிடலாம்", அமெரிக்கர்கள் போட்டு கொண்டு திரியும் "அரைக்கால் சட்டை போட்டுத் தொழலாம்", போன்ற தடால் புடலான அதிரடி ஃபத்வாக்களை வழங்கி இஸ்லாத்தை தலை குனிவு ஏற்படுத்தினர். (பன்றி விஷயம் பற்றி பேசியதால் மலேசியா வில் செருப்படி வாங்கினார்).

நபிகள் கோமான் ஸல்... அவர்கள் உண்டு என்று கூறிய மார்க்க விஷயத்தில்
தனக்கு மார்கத்தில் சட்டம் சொல்ல உரிமை உள்ளது என்பதை போல "ஜும்மாவிற்கு முன் சுன்னத் தொழுகை கிடையாது", "பெண்கள் கப்ர் ஜியாரத் செய்ய கூடாது", தான் கூறியவைகள் தவறானதென்றுக் கூறித் திரும்ப நக்கி, அவைகளை வாபஸ் பெற்றுக் கொன்றார்.

சென்னையில் நடந்த இரண்டு விவாதங்களின் மூலம் தன்னையும் தன்னுடைய முகல்லிதுகளையும் (தன்னுடைய மத்ஹபை பின் பற்றகூடியவர்களையும்) காபிர்கள் என்று அடையாளம் காட்டியுள்ளார், காரணம்

  • அல்லாஹ்விற்கு உருவம் உண்டு,
  • இஸ்லாத்தை காட்டி தந்த நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் மாற்றி மாற்றி பேசியுள்ளார்கள்.
  • சஹாபாக்கள் முர்தத் (முஸ்லிம் ஆகி காபிர் ஆகி விட்டவர்கள்) ஆவர்கள்

என்று கூறி தானும் தன்னுடைய கூட்டத்தினரும் முர்தத் (முஸ்லிம் ஆகி காபிர் ஆகி விட்டவர்கள்) என்று கூறாமல் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை குர்ஆன் ஹதீஸின் மொழி பெயர்ப்பை கொண்டு தாமாக விளங்கி கொள்ளவேண்டும், இமாம்களை பின்பற்ற கூடாது என்று கூறி கொண்டிருந்தவர் தற்போது சுயமாக மார்கத்தை பின் பற்ற முடியாது என்று முடிவிற்கு மறைமுகமாக வந்து தான் ஒரு இமாம் என்றும் சட்டத்தை இனிமேல் ஆய்வு செய்து சொல்வேன் என்றும் கூறி உள்ளார்.

தமிழ் படித்து மார்கத்தை விளங்கலாம் என்று நினைப்பவர்களின் கதி இது தானா? நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக இஸ்லாமியர்களை ஆக்குவதில் இவர்களுக்கு லாபம் தான் என்ன? மத்ஹப் இருக்ககூடாது, மத்ஹப் ஐ பின்பற்றக்கூடாது என்று ஒரு மத்ஹபை உருவாக்கி இருக்கின்றார்கள், இந்த மத்ஹபில் இமாம்களை திட்டலாம், ஆலிம்களையும் திட்டலாம், ஒருமையில் பேசலாம் என்ற கொள்கையும் இருக்கின்றது, இப்படி திட்டி பேச வேண்டும் என்பது நபிகளாரின் கலாச்சாரமா? அல்லது நபிவழியா? மனோ இச்சை தானே? மார்கத்தை குளறு படி ஆக்கும் நோக்கம் தானே?


நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்…. அவர்களின் ஹதீஸில் கூட அவர்களின் (குறு)மதிக்கு புரியாவிட்டால் சஹீஹாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள கூடாது என்பதும் ஒரு கொள்கை, இப்படி போனால் குர்ஆனிலும் அறிவிற்கு(ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்தால் தான் குழந்தை பிறக்கும், அதனால் ஈசா அலை… ஆண் இல்லாமல் பிறந்தார் என்பது எங்களின் அறிவிற்கு) எட்டவில்லை என்று ஒதுக்க நினைக்கும் வசங்கள் ஏராளம். அந்த வரிசையில் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு, இது பக்கா காபிர்களின் கொள்கை தானே? எங்களை பார்த்து அத்வைதம் கொள்கை என்றா சொல்கின்றீர், வாஹ்ஹாபிகள் காபிர் கொள்கையில் இருகின்றார்கள் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொன்னதால், அதே போல சாக் என்று ஹதீஸிலும் குர் ஆனிலும் வந்ததற்கு (கடினம் என்ற உண்மையான அர்த்தத்தை விட்டு விட்டு) கால் என்று அர்த்தம் வைக்கும் போது ஒரு கால் என்று தானே வருகிறது என்று கேக்கும் போது ஒன்று வந்தாலும் இரண்டை தான் நினத்துகொள்ள வேண்டும் என்று சொல்பவர்கள், முஸாபா செய்யும் பொது கை என்று தான் வருகிறது அதனால் ஒரு கை தான் என்று எப்பிடி அர்த்தம் கொடுத்தார்கள், மனோ இச்சை வெளிப்பாடாக தெரிகிறது, காபிர்களே எள்ளி நகையாடி, நாங்களும் நீங்களும் ஒன்று தான், உங்கள் மண்டையிலும் தொப்பி இல்லை, இறைவனுக்கு உருவமும் உள்ளது, தூதர் என்று சொல்லப்படுபவரும் நம்மை போன்ற மனிதர் தான் (நவூதுபில்லாஹ்), எப்பிடி விரும்புகின்றீர்களோ அப்படி மதத்தை பின்பற்றி கொள்ளலாம், புராணத்தை தொடுவதை போல குர் ஆனை யும், சுத்தம் இல்லாவிட்டாலும் கூட தொடலாம், கருவறைக்கு செல்லக்கூடாது என்பதை போல பள்ளிவாசலுக்கு மட்டும் போக கூடாது, இனிமேல் நீங்களும் எங்களை போல சிலை வணக்கத்திற்கு வந்து விடுவீர்களா (நவூதுபில்லாஹ்) என்று கேட்பதற்கு வாய்ப்பை உருவாக்கி தந்த வாஹ்ஹபிகளே சிந்திப்பீர்,

வாஹ்ஹாபிகள் மனோ இச்சையின் படி தான் வாழ்பவர்கள், உண்மையில் குர் ஆனிற்கும் ஹதீசிற்கும் சம்பந்தம் இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்திய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்! மக்கள் இவரின் உண்மையான முகத்தை உணர்ந்து கொண்டு இவர்களை பின்பற்றுவதை விட்டு தவிர்ந்து உண்மையான சுன்னத் ஜமாத்தின் கொள்கையில் வருவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்!

யா ரப்பல் ஆலமீன்!






0 comments: