முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Monday, December 6, 2010

நிராகரிப்பின் உச்சத்தில் போலி தவ்ஹீது.

PJ என்ற மனிதர் தெண்டி (நஸாஈ கிதாபை நசஈ என்று சொல்லும் வரை தொண்டி தெண்டி தான்) என்ற ஊரை சேர்ந்தவர். இவர் எப்பிடி இருந்தார் இப்போது எப்பிடி இருக்கின்றார் என்றெல்லாம் நமக்கு தெரிந்த ஒன்றாகவே இருக்கின்றது.

சென்னையில் நடந்த மூன்றாம் விவாதத்தில் இந்த பரமார்த்தகுரு ஜி, ஷாபி இமாம் பழைய சொல் கூறி இருக்கின்றார்கள். ஷாபி இமாம் புதிய சொல் கூறி இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் போது நாம் கூறினால் என்ன? என்று கேட்கின்றார். அவர்கள் தப்பு செய்வார்களாம், நாம் அல்லாஹ் , அதாவது அல்லாஹ் இடத்தில் கொண்டு என்னை (PJ) வைக்கிறார்கள். அல்லாஹ் தான் தப்பு செய்ய மாட்டான். மனிதன் தப்பு செய்வான் தானே.

அவர்கள் தப்பு செய்தால் ஏற்றுக்கொள்கின்றார்கள், நாம் (PJ) சொன்னால் முரண்பாடு என்று கூறுகின்றார்கள். மனிதன் என்னும் முறையில் தவறாக ஆய்வு செய்து இருப்பேன், முன்னாள் உள்ளதை பார்க்காமல் விட்டு இருப்பேன், பின்னால் உள்ளதை பார்க்காமல் விட்டு இருப்பேன். சரியான ஹதீஸை பலவீனம் என்று எண்ணி இருப்பேன். பலவீனமான ஹதீஸை பலம் என்று எண்ணி இருப்பேன் என்று உளறி கொட்டி கொண்டு இருந்தார். இதுவெல்லாம் ஒப்புதல் வாக்குமூலங்கள் (அதை விவரித்து கூறும் போது புரியும்).

மேலும் இவருக்கு வக்காலத்து வாங்கும் தளம் ஒன்று PJ வை அல்லாஹ்வாக்கும் முயற்சி என்று ஒரு தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளார்கள். இதெற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த தகவல்களை தருகின்றோம். பின் வரும் இவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் சேர்த்து நவூது பில்லாஹ் என்று கூறி கொள்கின்றேன். அல்லாஹ் இப்படி பட்ட தீங்கில் இருந்து காப்பாற்றுவானாக.

1980 களில் இந்த PJ தன்னுடைய துதி பாடிகளுடன், யூதர்களின் பணங்களை கொண்டு இயக்கங்கள் பலவற்றை துவக்கினார். அப்போது என்ன கூறினார். குர்'ஆன் ஹதீஸை மட்டும் தான் பின்பற்றப்பட வேண்டும். (இந்த கருத்து தான் காலம் காலமாக சுன்னத் ஜமாஅத் மக்களால் இமாம்களின் உதவியுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது என்ற உண்மை ஒரு புறம் இருக்க, ஏழ்மையில் இருந்த இவர் மார்கத்தை விற்று பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். பணம் பங்கு போட்டதில் ஏற்பட்ட தகராறில் ஒரு ஒலிநாடா எம்மிடம் உள்ளது). இமாம்களை பின்பற்றக்கூடாது, சுயமாக தான் குர்'ஆன் ஹதீஸை ஆய்வு செய்து மார்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறி கொண்டிருந்தார். அப்படி சுயமாக ஆய்வு செய்து மார்க்கம் பின்பற்றப்படவேண்டும் என்று கூறியவரிடம் மாறுதல் வந்தது.

பிறை பற்றி ஆய்வு,
ஜகாத் பற்றி ஆய்வு,
நபிமார்களை பற்றி ஆய்வு,
ஜியாரத் சம்பந்தமாக ஆய்வு,
இறைவனுக்கு உருவத்தில் ஆய்வு,
கை எங்கு கட்ட வேண்டும் என்று ஆய்வு,
விரலை ஆட்ட வேண்டும் என்று ஆய்வு
பிறந்த குழந்தைக்கு பாங்கு சொல்ல கூடாது என்று ஆய்வு
பன்றியின் ஏனைய உறுப்பை சாப்பிடலாம் என்று ஆய்வு
தொடை காட்டலாம் என்று ஆய்வு.
(
எந்த ஆய்வும் சரி இல்லை என்பது வேறு விஷயம்)


என்று பல ஆய்வுகளை செய்து தான் இமாம் என்ற நிலைக்கு உயர்ந்தார். தன்னை பின்பற்றுபவர்கள் எல்லாம் முகல்லிதுகள், நம்முடைய போலி ஜமாஅத் ஒரு மத்'ஹபு என்று உருவாக்கினார். இதன் காரணமாக தான் தப்பு தப்பாக மார்கத்தில் இல்லாத விஷயங்கள் பலவற்றை புகுத்தினார். இருக்கின்ற விஷயங்களை நீக்கியும், இல்லாத விஷயங்களை புகுத்தியும் புதுமை கண்டு இது தூய மார்க்கம் என்று கூறி கொண்டிருந்தார்.

சில காலம் சென்றது இன்னும் சற்று மேல் ஏறினார். சஹாபாக்களை எற்றுக்கொள்ளத்தேவை இல்லை. அவர்களுக்கு மார்க்கம் தெரியாது. ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரழி.... அவர்கள் குட்டையானவர்கள். அவர்கள் நபிகளார் எங்கே தக்பீர் கட்டினார்கள் என்று எட்டியா பார்த்தார்கள் என்று கிண்டல் அடித்து, நபிகளாரை நேரில் கண்ட அந்த கண்களை கிண்டல் அடித்தார். நபிகளாரிடம் பாடம் பயின்றவர்கள ஹழ்ரத் என்று கூறக்கூடாது உயர்திரு என்று தான் கூற வேண்டும் என்று பத்வா கொடுத்தார். மேலும் சஹாபக்கலான அந்த உயர்ந்தவர்களை ரழியல்லாஹு அன்ஹு என்று கூறுவதே இல்லை. வாய் மீறி வந்தால் தான் உண்டு என்ற நிலைக்கு வந்து, தான் சஹாபா வை விட உயர்ந்த நிலையில் உள்ளேன் என்று கூறாமல் கூறிய PJ, அடுத்து நபிகளாரின் மனைவி மார்களை கை வைத்தார். பிறகு நபிகளார் ஸல்... அவர்களின் புனித மிகு அஹ்ல பைத் களின் மீது கை வைத்தார். இதற்க்கு பின்னும் தாகம் தணியாத இந்த வெறி நாய் பிறகு ஏனைய நபிமார்களை குறை கூறியது.

ஹழ்ரத் யூசுப் அலை.... ஹழ்ரத் ஜுலைகா அலை... அவர்களை திருமணம் முடிக்கவில்லை. ஹழ்ரத் தாவூத் அலை.... ஏழையின் பொருள்களை அபகரித்தார்கள், ஹழ்ரத் ஆதம் அலை ஹழ்ரத் ஹவ்வா அலை... ஆகியோர் நிர்வாணமாக இருந்தார்கள். ஹழ்ரத் மூஸா அலை.... ஹழ்ரத் சபூரா அலை... திருமணம் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. அதே போல் ஹழ்ரத் அய்யூப் அலை.... ஹழ்ரத் ரஹீமா அலை... ஆகியோருக்கும் நடந்த திருமணத்திற்கும் ஆதாரம் இல்லை. ஹழ்ரத் யூனுஸ் அலை.... அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லை. ஹழ்ரத் யூசுப் அலை... அவர்கள் தவறு செய்ய நாடினார்கள் என்றெல்லாம் தன்னுடைய மொழியாக்கத்திலும், அவருடைய மஞ்சள் பத்திரிக்கையான (உணர்வில்லாத, தொழு நோய் உடைய) உணர்வு, (இணைவைக்கும்) ஏகத்துவம், முந்திய காலங்களில் இருந்த பத்திரிக்கைகளின் வாயிலாக எடுத்துரைத்தார். இதன் மூலம் நான் ஏனைய நபிகளை விட, நான் மிகவும் உயர்ந்தவன் என்று கூறிக்கொண்டார். இதிலும் மக்கள் இவரை வழிமொழிய பின் நமது உயிரினும் உயிரான, கண்ணின் மணி, நமது உயிரின் உயிர், நமது ஈமானின் ஒளி, நமது அறிவின் சுடர், முத்தான நபி, அல்லாஹ்வின் ஹபீப், ஏழைகளின் வாழ்வுகாட்டி, உயிருக்கும் மேலான, நபிகள் கோமான், நாயகக்கண்மணி நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மீது கை வைத்தது.

நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் நம்மை போன்ற மனிதர், அவர்களுக்கு நமக்கு தெரிந்த விஷயங்கள் கூட பலவிஷயத்தில் தெரியவில்லை. மார்கத்தில் நபிகளார் தப்பு தப்பாக கூறி மாறிய விஷயங்கள் நிறைய உள்ளது. அவர்களின் மனைவி மார்களை அவர்கள் சந்தேகம் கொண்டார்கள் ஆனால் நாங்கள் சந்தேகம் கொள்ளவில்லை என்று களியக்காவிளையில் வாதிட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மறைவானதை அறிவிக்கவில்லை. என்றெல்லாம் தவறான விஷயங்களை மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்து தான் எதோ அதி மேதாவியை போல எடுத்துக்காட்டினார். சில மட்டி, மடையர், மூடன் கள் இந்த பரமார்த்தகுரு ஜி யை நம்பினார்கள். இதனால் தான் நபிகள் நாயகம் ஸல்... அவர்களை விட தான் உயர்ந்தவர் என்று தன்னை உயர்த்தி கூறினார். இவரை பின் பற்றுபவர்களும் آمنا سلمنا நீங்கள் முன் மொழிந்ததை வழிமொழிந்தோம் என்று கூறினார்கள். நபிகள் ஸல்... அவர்கள் கூறியது தப்பு என்று கூறி, தான் அதை திருத்துவதாக கூறி கொண்டு, பலவீனமான ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி கொண்டிருந்தவர், பலமான ஹதீஸ்களை கூட இந்த கூமுட்டை அறிவுக்கு புரியவில்லை என்பதனால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி அஹ்லுல் குர்'ஆன் என்ற நிலைக்கு வந்தார்.

இப்படி காதியானி கொள்கையை விட மோசமான கொள்கையில் இருந்தவரின் கொள்கையில் இன்னும் ஒரு மாற்றம். அதாவது தான் அல்லாஹ் அளவுக்கு உயர்ந்துள்ளதாக சுன்னத் ஜமாஅத் காரர்கள் நினைக்கின்றார்கள் என்றும், அவர் கொள்கையை ஆதரிக்கும் தளத்தில் உயர்த்த முயற்சிக்கின்றார்கள் என்றும் கூறி முழுமையாக வழிகேடனாக இந்த PJ மாறிவிட்டார் என்று தெரிகின்றது. உண்மையான எந்த ஒரு மூமினின் வாயிலும் இந்த வார்த்தை வரவே வராது. இங்கு வந்து இருக்கின்றது என்றால் பார்த்துக்கொள்ளவும்.

சரி இவரின் கூற்று உண்மையா?

இல்லை. நாம் இமாம்களை பின்பற்றுகின்றோம், அவர்கள் ஆய்வு செய்து மக்களுக்கு ஒரு சட்டம் சொல்லி இருப்பார்கள், அந்த காலத்தில் ஹதீஸ்கள் அச்சடிக்கப்பட்டு இல்லாத நிலை இருந்தது, அதனால் பிறகு அதை விட பலமான ஹதீஸ்கள் கிடைத்த போது சட்டங்களை மாற்றி இருப்பார்கள். இது தான் எதார்த்தமான ஒன்றாக இருந்தது. இதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இவருக்கு ஏன் தவறு வந்தது என்று கேட்கின்றோம். அல்லாஹ் அளவிற்கு இவரை உயர்த்தி கேட்கவில்லை. இவருக்கு வேண்டுமானால் இவருக்கு சிலை வைத்து, அல்லாஹ் அளவிற்கு உயர்த்தி பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கலாம். நாங்கள் அல்லாஹ்வை யார்க்கும் இணையாகக மாட்டோம். நாம் கேட்கும் கேள்விகள் சில.

1.
ஆனால் ஆய்வு செய்யவே மார்கத்தில் கூடாது, நேரடியாக தான் மார்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறியவர் ஏன் ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

2. இமாம்கள் தப்பாக கூறினார்கள் என்று தானே ஒரு வழிகெட்ட ஜமாத்தை ஆரம்பித்தார். பின் ஏன் தப்பாக கூறினார்.

3. உண்மையை சொல்ல தானே போலி தவ்ஹீதை ஆரம்பித்தார். பின் ஏன் முரண்பட்டார்.

4. இமாம்கள் தவறு செய்வதாக அதை கண்டித்து அதை சரி செய்ய முனைந்த இவர் தவறு செய்தால் நியாயமா?

5. இவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் போது இமாம்களும் செய்து இருக்கின்றார்கள் என்று கூறுவது பொருந்துமா?

6. முன் உள்ள ஹதீஸ்களையும், பின் உள்ள ஹதீஸ்களையும் பார்க்காதவர் ஆய்வு செய்ய தகுதி உள்ளவரா?

7. எந்த ஹதீஸ் சஹீஹ், எது ளயீப் என்று சட்டம் சொல்வதற்கு முன் கண்டு பிடிக்க முடியாதவர் ஆய்வு செய்யலாமா?

8. இமாம்களை குறை கண்டவர், தன்னை இமாம்களோடு ஒப்பிடலாமா?

9. இமாம் அபூ ஹனிபா ரஹ்... அவர்களும் மாறி சட்டம் கூறினார்கள் என்று கூறியவர் எப்பிடி மாறி சட்டம் சொல்லலாம்.

10. குர்'ஆன், ஹதீஸை தான் பின் பற்ற வேண்டும் என்று கூறியவர், தொடை விஷயமாக மாலிக் இமாமை (அவர்களும் தொடை மறைக்க தான் சொன்னார்கள் என்பது தான் உண்மை) ஆதாரமாக்கலாமா?

11. இமாம்களை குற்றம் குறை கண்டு பிடித்தவர் இமாமை ஆதாரமாக்கலாமா?

12. அப்படி ஆதாரம் ஆக்குபவர் இமாமாக இல்லாமல் முகல்லிது ஆக மாறி விட்டது என்று தெரியவில்லையா?

13. இவர் ஆய்வு செய்யும் தகுதி இல்லை தானே?

14. எந்த விவாதத்தை எடுத்தாலும் காழி இயாழ் கூறினார், இப்னு குதைபா கூறினார், மாலிக் இமாம் கூறினார், அஹ்மத் இமாம் கூறினார், ஷாபி இமாம் கூறினார் என்று சொல்பவர் குர்'ஆன் ஹதீஸ் படி தான் வாழ்பவரா? இல்லை இமாம்களை பின் பற்றுபவரா?

15. இவரை தப்பு காண கூடாது என்று குர்'ஆனிலோ ஹதீஸிலோ இருக்கின்றதா?

16. தீய மனிதர் ஒரு விஷயத்தை சொன்னால் அதை ஏற்பதற்கு முன் சரி காண வேண்டும் என்ற வசனத்தை ஹதீஸ் கலையில் கூறிய இவருக்கு இந்த விஷயம் பொருந்தாதா?

17. இப்படி கூறினால் அல்லாஹ் இடத்தில் வைக்கின்றோம் என்று அர்த்தமா?

18. தப்பே செய்ய கூடாது என்று கூறியவர்கள், தலை முதல் கால் வரை தப்பாக இருப்பதை எடுத்துக்காட்டுவது குற்றமா?

19. இமாம்கள் தப்பு செய்துள்ளார்கள் என்று நீங்கள் சொன்னீர்களே, அவர்கள் தப்பு சொல்ல கூடாது என்று தானே கூறினீர்கள், அப்போது அவர்கள் மனிதர்கள் இல்லையா? அல்லாஹ்வாக நினைத்தீர்களா? தப்பு சொல்லாதவன் அல்லாஹ் அதனால் இமாம்கள் எப்பிடி தப்பு சொன்னார்கள் என்று தான் கேட்டீர்களா?

20. உங்களுடைய தவறான கருத்துக்களை (தப்பு சொல்லாதவன் எல்லாம் அல்லாஹ், இமாம்களை அப்படி தான் நினைத்தோம், அது மாற்றமாகி விட்டது, நான் தப்பு சொல்லாமல் என்னை அல்லாஹ் வாக்க முனைகின்றார்கள்) கூறலாமா?

21. அப்படி என்றால், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் பொன்மொழி, பேசினால் பொய் பேசுவது முனாபிக்கின் தன்மை என்று கூறுவதின் அர்த்தம் என்ன? (நம்ம தான் ஹதீஸை எடுக்க மாட்டோமே நீ வேற என்னயா?)

22. அது எல்லா பேச்சுக்குமா பொருந்தும்? ஒரு விஷயத்தில் பேசினாலே பொருந்த தானே செய்யும்!

23. மனிதன் என்னும் முறையில் மேலோட்டமாக ஹதீஸ் கிதாபை படிப்பவர் ஆய்வுக்கு லாயக்கா?

24. இவர் சட்டம் சொல்ல மாட்டேன் என்று தானே இந்த ஜமாத்தை உருவாக்கினார், பின் ஏன் முன்னுக்கு பின் முரண் ஆனார்?

25. மக்கள் இவர் சட்டம் சொல்லி தான் கேட்க வேண்டும் என்று ஏன் நிற்பந்திக்கின்றார்.

26. ஜமாலி அவர்கள் விவாதத்தில் PJ வான நீங்கள் விளக்குங்கள் நான் உங்கள் மக்களிடம் கேள்வி கேட்கின்றேன் (உங்களோடு தோல் கொடுத்துக்கொண்டிருக்கும் ஆலிம்களையும் சேர்த்து) என்று சொன்ன போது, அவர்களுக்கு விளங்காது நான் தான் சட்டம் சொல்ல வேண்டும் என்று ஒப்புதல் வாக்குமூலம் எப்பிடி கூறினீர்கள்?

27. ஆக மத்'ஹப் வழியில், எதோ ஒரு இமாமை மனதில் வைத்து நீங்கள் அவரை பின் பற்றி, மக்களுக்கு நீங்கள் இமாமாக சட்டம் கூறி கொண்டிருக்கின்றீர்களா?

28. ஹதீஸ் கிரந்தங்கள் அச்சடிப்பட்டு இருந்தாலும், அதை CD க்களில் மாற்றி இருந்தாலும், எனக்கு ஜகாத் தேவை என்றால் ஒரு சட்டம். நான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால் ஒரு சட்டம். தவறை சரி என்று கூறுவேன், சரியை தவறு என்று கூறுவேன். எல்லா ஹதீஸ்களும் என்னுடைய மனோ இச்சையின் விளையாட்டு மைதானம் என்று கூறுகின்றீர்களா?


29 . ஹதீஸ் கிரந்தங்கள் அச்சடிப்பட்டு இருந்து, அதை இவர் கூறி, அதில் தவறாக சட்டம் சொல்கின்றீர் என்று சுட்டி காட்டும் போதும் தவறு செய்பவர் என் குருட்டுக்கண்ணுக்கு தெரியவில்லை என்று எப்பிடி கூறலாம்?


30 . அச்சடிக்கப்பட்ட நூலை ஆய்வு செய்ய கிளம்பியவர் அதை நான் மேலோட்டமாக தான் பார்த்தேன் என்று கூறுவது நியாயமா?


31. மேலோட்டமாக பார்த்து தவறான சட்டங்கள் வகுத்து தருபவருக்கு ஆய்வு தகுதி இருக்கின்றதா?

என்பது மேல இவர் பேசிய சிறு உரையின் சாராம்சத்திலிருந்து எழும் வினாக்கள் ஆகும். இதை மக்கள் மன்றம் ஒழுங்காக புரிந்தாலே, வழிகெட்ட மக்கள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்.

இப்படி கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு இவரை தாழ்ந்த நிலையில் வைத்து இருக்கும் இவரை அல்லாஹ் அளவிற்கு உயர்த்துகின்றோம் என்று இட்டுக்கட்டி ஆசைப்பட்டு, பிச்சைக்காரனுக்கு அல்லாஹ் என்று களியக்காவிளையில் பட்டம் கொடுத்த இவர், தற்போது இவரையும் கூற வேண்டும் என்ற நப்பாசையில் வந்ததால் நிராகரிப்பின் உச்சத்தில் இருக்கின்றார் என்பதை அறிவித்துக்கொள்கின்றோம்.

சரி இவரை அல்லாஹ் மாதிரி நினைக்கிறோம் என்று கூறி இருக்கின்றாரே என்று நம்மிடம் கேள்வி கேட்கலாம் அதற்கு பதில்,






இவரை நாம் எந்த நிலையில் வைத்து இருக்கின்றோம் என்றால், சமூகத்தில் தாழ்ந்த விலங்கினமாக கருதப்படும் பன்றி, பெருச்சாளி என்று தான் கருதுகின்றோம்.

காரணம் என்ன தெரியுமா? இவர் பன்றியின் ஏனைய உறுப்பை புசிக்கலாம் என்று கூறியதால் பன்றி என்றும்,

பெருச்சாளி, கட்டிடங்களையும், அஸ்திவாரத்தையும் நிர்மூலம் ஆக்கும். அதே போல் இவர் மார்கத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் சிதைக்கின்ற காரணத்தால் இவரை பெருச்சாளி என்று கருதுகின்றோம்.

அதனால்
இவருக்கு இப்படி பட்ட எண்ணங்கள் வரவே கூடாது என்று கூறி, யா அல்லாஹ் நம்முடைய கூட்டம் அனைத்தையும் என்றென்றும் நேரான வழியில் வைப்பாயாக! அல்லாஹ்வை அல்லாஹ் என்றும், மக்களை மக்கள் என்றும் பிரித்தறியும் கொள்கையில் என்றென்றும் நிலைத்திருக்க செய்வாயாக. பெரியவர்களை மதிக்கும் பண்பில் தொடர செய்வாயாக. நபிமார்களை மதிக்கும் கூட்டத்தில் நீடிக்க செய்வாயாக. நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களை என்றென்றும் மதிக்கும் கூட்டத்திலேயே நம்மையும்,

நம் குடும்பத்தவர்களையும், நம் வருங்கால சந்ததியினரையும் என்றென்றும் ஆக்கி அருள் புரிவாயாக!

ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!



1 comments:

Raashid Ahamed said...

ஒரு முஸ்லிமுக்கு இருக்கவே கூடாத குணங்கள் அனைத்தும் உள்ள ஒரு ஆள் தான் பிஜே. ஒரு பெரும் திறமை வாய் சூனியம். இதில் தான் ஒரு கூட்டம் விழுந்து கிடக்கிறது. அல்லாஹ் காப்பாற்றவேண்டும். இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த கயவனுக்கு ஏற்பட போகும் முடிவை பார்த்தாவது முஸ்லிம் சமுதாயம் திருந்தட்டும்