

மதுரை நாபிஈ


ஆமீன்! ஆமீன்!
யா ரப்பல் ஆலமீன்.

இறைமறை குர் ஆனில் அல்லாஹ் கூறுவது போல் மனித உள்ளங்களில் சந்தேகவிதைகளை விதைக்கும் சைத்தான்கள் மனிதர்களிலும் உண்டு என்பதற்கு சரியான உதாரணம், பீ.ஜை எனப்படும் பீ.ஜைனுலாப்தீன்.
தன்னை அங்கீகாரம் செய்யாத இயக்கங்களானலும் சரி,மார்க்க மேதையானலும் சரி, ஜமாத்தானாலும் சரி, தனி மனிதராயினும் சரி அவர்கலைப்பற்றி அவதூறு பரப்பி சமுதாயத்தினரை குழப்புவார்.
அதற்கு சரியான சமீப உதாரணம் நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா வக்ப் மருத்துவக்கல்லூரி விவகாரம். உண்மை என்னவென்று தெரிந்தும் அதனை மறைத்து மருத்துவக் கல்லூரி உருவாகிவிடக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் தங்களிடமிருந்து திருடி விட்டார் என ஒரு இயக்கம் குற்றம் சாட்டிய உணர்வு இதழில் சில சந்தேக விதைகள விதைத்துள்ளார்.
உண்மை என்னவென்று தெரிந்தும் அதனை வெளியே சொல்லமல் மறைப்பவன் ஊமை சைத்தான் என நபி(ஸல்) கூறினார்கள் இப்போது உண்மை என்ன என்பதையும் தெரிந்தும். பீ.சை சாரி பி.ஜை அதனை மறைத்து சந்தேக விதைகளை விதைத்துள்ளார்.
உண்மையை மறைக்கும் ஊமை சைத்தான்
மருத்துவக் கல்லூரி துவக்குவது தொடர்பான முதல் ஆலோசனக்கூட்டம் நீடுரில் நடத்த முடிவு செய்ய முடிவான பொழுது விளக்கம் தர நீடூர் மதரசாவுடன் தொடர்புடைய மூன்று பேர்களின் தொலைபேசி எண்கள் நீடுர் ஆன்லைன் டாட் காம் என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டது.
நன்றாக கவனியுங்கள் செய்தி தொடர்புக்கு என்று கொடுக்கப்பட்டதே தவிர மருத்துவக் கல்லூரிக்கு இவர்கள் தான பொறுப்பாளர்கள் என அறிவிக்கப்படவில்லை. ஒரு நிருவனத்திற்கோ, இயக்கத்திற்கோ ஒருவரை செய்தி தொடர்பாளர் என அறிவிக்கப்பட்டால் தொடர்புடைய அந்த நிறுவனத்திற்கு அவர்தான் முழு பொறுப்பாளராகி விடுவாரா? அவர்களை மட்டும் நம்பி பல கோடிகளை மக்கள் கொடுத்து விடுவார்களா?
இந்த உண்மை தெரிந்தும் சந்தேக விதைகளை மக்கள் உள்ளத்தில் விதைக்கிறார். அவரின் சைத்தானிய உணர்வலைகள் இப்படி வெளிப்படுகிறது. "எஸ்கொயர் சாதிக், இஸ்மாயில் நாஜி, ஜர்ஜிஸ் ஆகிய மூவரின் செல்போன்கள் தொடர்பு எண்ணாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை தொடர்பு கொள்ளும் போது ஒவ்வொருவரும் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றனர்.
இவர்களிடம் விசாரிக்கும்போது மருத்துவ கல்லூரியை வக்ப் வாரியம் நடத்துவதாகக் கூறாமல் மக்களிடம் ஷேர் சேர்த்து தனி டிரஸ்டாக நடத்த இருப்பதாகக் கூறுகின்றனர். இது வக்ப் வாரியத்தால் நடத்தப்படுகிறதா என்று கேட்கும் போது இல்லை. நாங்கள் தனியார் நடத்துகிறோம். கவிக்கோ அப்துர்ரஹ்மான் முதல்வரிடம் செல்வாக்கு பெற்றவராக உள்ளதால் அவர் பெயரைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று இவர்கள் கூறியுள்ளனர்.
வக்ப் வாரியத்தலைவரின் பெயரைப் பயன்படுத்தி யாரோ சிலர் உள் வேலை செய்வதாக எழுந்துள்ள சந்தேகத்தை வக்ப் வரியம் நீக்கவேண்டும்"
கவிக்கோ அவர்களை ஏன் தொடர்பு கொள்ளவில்லை?
சகோதரர்களே! பொதுவாக புலனாய்வு இதழ்கள் எனப்படும் ஜூனியர் விகடன் போனறவைகள், ஒரு செய்தியை வெளியிடும் பொழுது, குறிப்பாக மோசடி போன்ற செய்திகளை வெளியிடும்போது தொடர்புடைய அனைவரின் கருத்துகளையும் பதிவு செய்வார்கள்.
பீ.ஜை.என்ற பீ.ஜைனுலாப்தீன் உண்மயான சமுதாய அக்கரை இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? வக்ப் வரியத் தலைவரின் பெயரை யாரோ சிலர் தவறாக பயன்படுத்திகிறார்கள் என சந்தேகம் வந்தவுடன் வாரியத் தலைவர் கவிக்கோ அவர்களைத் தொடர்பு கொண்டு அவரின் கருத்தையும் கேட்டு வெளிட்டிருக்கவேண்டும்.. தொடர்பு கொள்வதற்காக கொடுக்கப்பட்ட செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு கேட்க தெரிந்த இந்த மே(ல்)தாவிக்கு கவிக்கோ அவர்களைக் கேட்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?
உண்மை என்னவென்று தெரிந்தே மக்களைக் குழப்புவதுதானே அவர் நோக்கம்.இதை நாம் உறுதி பட கூறுவதன் காரணம்"
தெரிந்தே வழிகெடுக்கும் சைத்தான்
தனது சைத்தானிய உணர்வலைகளின் துவக்கத்தில் மருத்துவக் கல்லூரி தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிடுகிறார். ஆலோசனைக் கூட்டங்கள் நடப்பது தெரிந்த அவருக்கு அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனைத்தும் கவிக்கோ அவர்களின் கையெப்பத்துடன் அனுப்பப்பட்டது என்பதும், அந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியதும் வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ அவர்கள்தான் என்பதும் பீ.ஜை க்குத் தெரியாதா?.
பீ.ஜை. என்னென்ன சந்தேகங்களை எழுப்பி உள்ளாரோ அத்தனைக்கும் பதில் கவிக்கோ அவர்களின் உரையிலேயே இருக்கிறது.
மருதுவக் கல்லூரி வக்ப் வாரியம் நடத்துகிறதா, இல்லை தனியார் டிரஸ்ட்டா? என்ற கேள்வியை இவர் எழுப்புவது டிசம்பர் 22 ந்தேதி வெளியான உணர்வு இதழில், அந்த இதழ் வெளிவருவதற்கு 18 நாட்கள் முன்பாகவே அதற்கு கவிக்கோ பதில் வழங்கி உள்ளார்.
04/12/2010 சென்னையில் வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. அதில் பல கல்வியாளர்கள், ஆடிட்டர்கள், செல்வந்தர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் மிகத் தெளிவாக கவிக்கோ கீழ் கண்டவாறு கூறினார்கள்:
மிஸ்பாஹுல் ஹுதா வக்ப் மருத்துவக் கல்லூரியை வக்ப் வாரியமோ, மிஸ்பாஹுல் ஹுதா மதரசாவோ நடத்தவில்லை, மாறாக பத்து லட்சம் ரூபாய் ஷேர் வாங்குபவர்கள் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்கள். முழுக்க முழுக்க நமது சமுதாய மக்களிடம் பங்கு வாங்கப்பட்டு பங்குதாரர்களை கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட்டு பொதுக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மன்ற குழுவினரே மேற்படி கல்லூரியை நடத்தப்போகிறார்கள், என தெளிவாக அறிவித்தார்கள்.
அந்தக் கூட்டத்தின் நிகழ்வுகள் சன் டிவி போன்ற தொலைகாட்சியிலும், தினசரி நாள் இதழ்களிலும் வெளி வந்தன.
இவைகள நன்கு அறிந்தும் பீ.ஜை வக்ப் மருத்துவ கல்லூரி என்ற பெயரில் சமுதாயம் ஒன்று படக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் மனித சைத்தானாக சந்தேக விதைகளை விதைக்கிறார்.
மருத்துவக் கல்லூரியை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு அதனை முன் நின்று உழைப்பவர்களின் மீது சமுதாயம் நம்பிக்கை இழக்க வைக்க வேண்டும் என அவரின் சைத்தானிய மூளை வேலை செய்கிறது.
வாரியத் தலைவர் கவிக்கோ அவர்களின் மீது ஏற்கனவே ஊழல் புகார் கூறி வழக்கு என்றதும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
மருத்துவக் கல்லூரி தொடர்பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நீடூரில் நாகை, தஞ்சை, கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட மக்களை அழைத்து நடத்த முடிவு செய்த பொழுது தொடர்பு கொள்வதற்காக மூன்று பேரின் அலைபேசி எண்கள் நீடூர் ஆன்லைன் டாட் காம் எனும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது
இதில் எஸ்.ஏ.சாதிக் மிஸ்பாஹுல் ஹுதா மதரசாவின் பொது செயலாளர். மற்ற இருவர் மதரசாவின் நிர்வாக குழு உறுப்பினர்கள்.
முளையிலே இந்தத் திட்டத்தை கிள்ளிவிட வேண்டும் என்ற சைத்தானிய திட்டத்தில் மக்களின் உள்ளத்தில் அவ நம்பிக்கை ஏற்படும் வகையில் மக்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை போடும் சைத்தான்கள் ஜின்களிலும்.மனிதர்களிலும் உண்டு என குர் ஆன் (114:5-6) கூறுவதற்க்கேற்ப சாதிக் அவர்களைப் பற்றியும். இஸ்மாயில் நாஜி பற்றியும் மக்கள் உள்ளங்களில் சந்தேக விதைகளை விதைக்க முனைகிறார்.
குற்றஞ்சாட்டுவதற்கும் ஒரு ஆண்மை வேண்டும், ஆனால் இவர் பெட்டைத்தனமாக புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது, என எழுதுகிறார்.
அவதூறு பரப்புவதை பெறும் பாவமென அல்லாஹ் அந்நூர் அத்தியாயத்தில் விரிவாக கூறியுள்ளான். இவர் உண்மையான ஈமான் கொண்டவராக இருந்தால் ஆணித்தரமாக குற்றம் நடைபெற்றதாக எழுதிருக்க வேண்டும், அதைவிட்டு சைத்தான் போடும் வஸ்வஸாவைப் போல் புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது என ஏன எழுத வேண்டும்?
இதில் அல்ஹாஜ் S.A.சாதிக் அவர்கள் மயிலாடுதுறை பகுதியில் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத மக்களிடம் மரியாதைக்குறியவர். தொழிலதிபர். பொருளாதாரத்தில் நலிவுற்றிருந்த மிஸ்பாஹுல் ஹுதாவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் அதனை பொருளாதாரத்தில் தன்னிறவு பெறச்செய்தவர். அதனால்தான் மதரசா பொது குழுவினரால் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பொதுசெயலாளராக இருக்கிறார்.
பள்ளிவாசல் நிதி மோசடியைப் பற்றி இவரிடம் கூறியவர்கள் ஏன் நீடூர் ஜமாத்தில் புகார் கூறவில்லை? தலைவரைப் போன்று அவர்களும் பெட்டைகளா? பீ.ஜைக்கு ஆண்மை இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பொழுது முன் நின்று குற்றத்தை நிரூபிக்கட்டும்.
அடுத்து, இஸ்மாயில் நாஜியின் மீது வேறுவிதமான புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது என எழுதியுள்ளார். ஏற்கனவே இதே உணர்வு இதழில் நாஜியின் வண்டவாளங்களை வண்டி வண்டியாக எழுதலாம் என எழுதினார். அவர் உண்மையிலேயே ஆண்மை உள்ள முஸ்லிமாக இருந்தால் குறிப்பிட்டு ஏதேனும் குற்றச்சாட்டை முன் வைக்கட்டும், இவ்வுலகில் இங்குள்ள நீதி மன்றத்திலும். மறுமையில் அல்லாஹ்வின் மன்றத்திலும் வழக்கு தொடர்ந்து வென்று காட்ட தயாராக இருக்கிறார்.
இன்று நாஜிக்கு 63 வயதாகிறது. 40 ஆண்டுகளாக நீடூர் மக்களுக்குடன் தொடர்பு வைத்திருப்பவர். சிதம்பரத்தில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிரார்.சிதம்பரம் பகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். சிதம்பர்ம் தாலூக்கா இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் தலைவராக இருப்பவர். தமிழ்நாடு உலமாக்கள் மற்றூம் பணியாளர் வாரியத்தின் உறுப்பினர். அவரைப் பற்றிய இவரின் வஸ்வஸாக்கள் மக்களிடம் எடுபடாது.
உங்களைப் பற்றி உணர்வு இதழில் தவறாக எழுதப்பட்டது என்ற தொலைபேசி தகவல் வந்தபோது அல்ஹம்துலில்லாஹ் என மகிழ்ச்சி தெரிவித்தார். காரணம், பீ.ஜை.யின் நாசகார நாவினால் அவதூறு கூறப்படாத நல்லவர்களே இல்லை.
உலமாக்கள் தொடங்கி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இமாம்கள், வலிமார்கள், நபி தோழர்கள் வரை அனைவரின் மீதும் அவர் அவதூறு கூறியுள்ளார், அந்த பட்டியளில் நாஜி யை சேர்த்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாகத்தான் அவர் கருதுகிறார்.
ஏனென்றால் ஒரு முறை அவரின் குரு கூறினார்" நல்லவர் ஒருவர் உன்னைப் பற்றி வருத்தப்பட்டால் கவலைப்படு. ஏனென்றால் நல்லவர் வேதனைப்படும் ஏதோ கெட்ட செயல் உன்னிடம் இருக்கிறது.அயோக்கியன் ஒருவன் கோபப்பட்டால் சந்தோசப்படு! அவன் கோபப்படும் ஏதோ நல்ல குணம் உன்னிடம் இருக்கிறது என்று பொருள்" என்றார்கள்.
பீ.ஜை ஒருவரைக் குறை கூறுவது அதிசயமல்ல, எனென்றால் இவரின் முன்னாள் சகா ஒருவார் தனது இணையதளத்தில் எதிர்த்து கேள்வி கேட்கும் எவரும் இருக்கக் கூடாது என்பதற்காக தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக முந்திக்கொண்டு மற்றவர்கள் மேல் பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகளை கூறும் இவர் ":இரண்டு விஷயத்தை யார் மீது எறிந்தாலும் அவன் காலிம்மா! ஒன்று பொம்பள, இன்னொன்று பொருளாதாரம்,” என்று கூறுவது இவரின் கொள்கையாகும் என்று எழுதுகிறார்.
என்வே அவர் மருத்துவக் கல்லூரியை ஆதரித்து இருந்தால்தான் அதிசயம். மனித உள்ளங்களில் தெரிந்தே வஸ்வஸாவை சைத்தான் போடுவதிலிருந்தே நாம் போகும் பாதை சரியானது என்று நம்பலாம். என்வே இந்த மனித சைத்தான் என்னதான் முயன்றாலும் இந்த நல்ல காரியத்தை தடுக்க முடியாது.
இவ்வளவு பேரையும் குறை கூறும் இவர் என்ன குறைகளற்ற கோமேதமா? மாசற்ற மாணிக்கமா? பத்தரை மாற்று தங்கமா? பரிசுத்த ஆத்மாவா என்றால் சாதாரண கிளை நிர்வாகிக்கு உள்ள இஃலாஸ், தக்வா, ஒழுக்கம், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், இபாதத் என எதுவும் இவரிடத்தில் இல்லை என இவரின் முன்னாள் சகாக்களே கூறுகின்றனர்.
நித்யானந்தா, பிரமானந்தா போன்ற சாமியர்களை விட மோசமானவர் என்றும், தன் குடுப்பத்தின் பொருளாதரத்தை வள்ப்படுத்த ஜமாத்தை எப்படி பயன் படுத்துகிரார் என்றும் இணைய தளங்களில் எழுதியுள்லனர்.
என்வே பீ.ஜை எனும் பீ.ஜைனுலாப்தீனுக்கு சொல்லிக் கொள்கிரோம்... கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிய வேண்டாம். மயிலாடுதுரை அருகே பெரம்பூர் எனும் சின்ன கிராமத்தில் மளிகைக் கடை நடத்திக் கொண்டு, தொடை தெரிய தெரு ஓரங்களில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவர், அபூஅப்துல்லாஹ் தொடங்கி பாக்கர் வரை அவரை ஏற்றி விட்ட ஏணீகளை காலில் தள்ளி இண்று பொருளாதாரத்தில் எப்படி தன்னனிரவு பெற்றுள்ளார் என்பதனை வெளி இடநேரிடும்.
நன்றி : KTIC
PJ என்ற மனிதர் தெண்டி (நஸாஈ கிதாபை நசஈ என்று சொல்லும் வரை தொண்டி தெண்டி தான்) என்ற ஊரை சேர்ந்தவர். இவர் எப்பிடி இருந்தார் இப்போது எப்பிடி இருக்கின்றார் என்றெல்லாம் நமக்கு தெரிந்த ஒன்றாகவே இருக்கின்றது.
சென்னையில் நடந்த மூன்றாம் விவாதத்தில் இந்த பரமார்த்தகுரு ஜி, ஷாபி இமாம் பழைய சொல் கூறி இருக்கின்றார்கள். ஷாபி இமாம் புதிய சொல் கூறி இருக்கின்றார்கள். அப்படி இருக்கும் போது நாம் கூறினால் என்ன? என்று கேட்கின்றார். அவர்கள் தப்பு செய்வார்களாம், நாம் அல்லாஹ் , அதாவது அல்லாஹ் இடத்தில் கொண்டு என்னை (PJ) வைக்கிறார்கள். அல்லாஹ் தான் தப்பு செய்ய மாட்டான். மனிதன் தப்பு செய்வான் தானே.
அவர்கள் தப்பு செய்தால் ஏற்றுக்கொள்கின்றார்கள், நாம் (PJ) சொன்னால் முரண்பாடு என்று கூறுகின்றார்கள். மனிதன் என்னும் முறையில் தவறாக ஆய்வு செய்து இருப்பேன், முன்னாள் உள்ளதை பார்க்காமல் விட்டு இருப்பேன், பின்னால் உள்ளதை பார்க்காமல் விட்டு இருப்பேன். சரியான ஹதீஸை பலவீனம் என்று எண்ணி இருப்பேன். பலவீனமான ஹதீஸை பலம் என்று எண்ணி இருப்பேன் என்று உளறி கொட்டி கொண்டு இருந்தார். இதுவெல்லாம் ஒப்புதல் வாக்குமூலங்கள் (அதை விவரித்து கூறும் போது புரியும்).
மேலும் இவருக்கு வக்காலத்து வாங்கும் தளம் ஒன்று PJ வை அல்லாஹ்வாக்கும் முயற்சி என்று ஒரு தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளார்கள். இதெற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த தகவல்களை தருகின்றோம். பின் வரும் இவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் சேர்த்து நவூது பில்லாஹ் என்று கூறி கொள்கின்றேன். அல்லாஹ் இப்படி பட்ட தீங்கில் இருந்து காப்பாற்றுவானாக.
1980 களில் இந்த PJ தன்னுடைய துதி பாடிகளுடன், யூதர்களின் பணங்களை கொண்டு இயக்கங்கள் பலவற்றை துவக்கினார். அப்போது என்ன கூறினார். குர்'ஆன் ஹதீஸை மட்டும் தான் பின்பற்றப்பட வேண்டும். (இந்த கருத்து தான் காலம் காலமாக சுன்னத் ஜமாஅத் மக்களால் இமாம்களின் உதவியுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது என்ற உண்மை ஒரு புறம் இருக்க, ஏழ்மையில் இருந்த இவர் மார்கத்தை விற்று பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். பணம் பங்கு போட்டதில் ஏற்பட்ட தகராறில் ஒரு ஒலிநாடா எம்மிடம் உள்ளது). இமாம்களை பின்பற்றக்கூடாது, சுயமாக தான் குர்'ஆன் ஹதீஸை ஆய்வு செய்து மார்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறி கொண்டிருந்தார். அப்படி சுயமாக ஆய்வு செய்து மார்க்கம் பின்பற்றப்படவேண்டும் என்று கூறியவரிடம் மாறுதல் வந்தது.
பிறை பற்றி ஆய்வு,
ஜகாத் பற்றி ஆய்வு,
நபிமார்களை பற்றி ஆய்வு,
ஜியாரத் சம்பந்தமாக ஆய்வு,
இறைவனுக்கு உருவத்தில் ஆய்வு,
கை எங்கு கட்ட வேண்டும் என்று ஆய்வு,
விரலை ஆட்ட வேண்டும் என்று ஆய்வு
பிறந்த குழந்தைக்கு பாங்கு சொல்ல கூடாது என்று ஆய்வு
பன்றியின் ஏனைய உறுப்பை சாப்பிடலாம் என்று ஆய்வு
தொடை காட்டலாம் என்று ஆய்வு.
(எந்த ஆய்வும் சரி இல்லை என்பது வேறு விஷயம்)
என்று பல ஆய்வுகளை செய்து தான் இமாம் என்ற நிலைக்கு உயர்ந்தார். தன்னை பின்பற்றுபவர்கள் எல்லாம் முகல்லிதுகள், நம்முடைய போலி ஜமாஅத் ஒரு மத்'ஹபு என்று உருவாக்கினார். இதன் காரணமாக தான் தப்பு தப்பாக மார்கத்தில் இல்லாத விஷயங்கள் பலவற்றை புகுத்தினார். இருக்கின்ற விஷயங்களை நீக்கியும், இல்லாத விஷயங்களை புகுத்தியும் புதுமை கண்டு இது தூய மார்க்கம் என்று கூறி கொண்டிருந்தார்.
சில காலம் சென்றது இன்னும் சற்று மேல் ஏறினார். சஹாபாக்களை எற்றுக்கொள்ளத்தேவை இல்லை. அவர்களுக்கு மார்க்கம் தெரியாது. ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரழி.... அவர்கள் குட்டையானவர்கள். அவர்கள் நபிகளார் எங்கே தக்பீர் கட்டினார்கள் என்று எட்டியா பார்த்தார்கள் என்று கிண்டல் அடித்து, நபிகளாரை நேரில் கண்ட அந்த கண்களை கிண்டல் அடித்தார். நபிகளாரிடம் பாடம் பயின்றவர்கள ஹழ்ரத் என்று கூறக்கூடாது உயர்திரு என்று தான் கூற வேண்டும் என்று பத்வா கொடுத்தார். மேலும் சஹாபக்கலான அந்த உயர்ந்தவர்களை ரழியல்லாஹு அன்ஹு என்று கூறுவதே இல்லை. வாய் மீறி வந்தால் தான் உண்டு என்ற நிலைக்கு வந்து, தான் சஹாபா வை விட உயர்ந்த நிலையில் உள்ளேன் என்று கூறாமல் கூறிய PJ, அடுத்து நபிகளாரின் மனைவி மார்களை கை வைத்தார். பிறகு நபிகளார் ஸல்... அவர்களின் புனித மிகு அஹ்ல பைத் களின் மீது கை வைத்தார். இதற்க்கு பின்னும் தாகம் தணியாத இந்த வெறி நாய் பிறகு ஏனைய நபிமார்களை குறை கூறியது.
ஹழ்ரத் யூசுப் அலை.... ஹழ்ரத் ஜுலைகா அலை... அவர்களை திருமணம் முடிக்கவில்லை. ஹழ்ரத் தாவூத் அலை.... ஏழையின் பொருள்களை அபகரித்தார்கள், ஹழ்ரத் ஆதம் அலை ஹழ்ரத் ஹவ்வா அலை... ஆகியோர் நிர்வாணமாக இருந்தார்கள். ஹழ்ரத் மூஸா அலை.... ஹழ்ரத் சபூரா அலை... திருமணம் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. அதே போல் ஹழ்ரத் அய்யூப் அலை.... ஹழ்ரத் ரஹீமா அலை... ஆகியோருக்கும் நடந்த திருமணத்திற்கும் ஆதாரம் இல்லை. ஹழ்ரத் யூனுஸ் அலை.... அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லை. ஹழ்ரத் யூசுப் அலை... அவர்கள் தவறு செய்ய நாடினார்கள் என்றெல்லாம் தன்னுடைய மொழியாக்கத்திலும், அவருடைய மஞ்சள் பத்திரிக்கையான (உணர்வில்லாத, தொழு நோய் உடைய) உணர்வு, (இணைவைக்கும்) ஏகத்துவம், முந்திய காலங்களில் இருந்த பத்திரிக்கைகளின் வாயிலாக எடுத்துரைத்தார். இதன் மூலம் நான் ஏனைய நபிகளை விட, நான் மிகவும் உயர்ந்தவன் என்று கூறிக்கொண்டார். இதிலும் மக்கள் இவரை வழிமொழிய பின் நமது உயிரினும் உயிரான, கண்ணின் மணி, நமது உயிரின் உயிர், நமது ஈமானின் ஒளி, நமது அறிவின் சுடர், முத்தான நபி, அல்லாஹ்வின் ஹபீப், ஏழைகளின் வாழ்வுகாட்டி, உயிருக்கும் மேலான, நபிகள் கோமான், நாயகக்கண்மணி நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மீது கை வைத்தது.
நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் நம்மை போன்ற மனிதர், அவர்களுக்கு நமக்கு தெரிந்த விஷயங்கள் கூட பலவிஷயத்தில் தெரியவில்லை. மார்கத்தில் நபிகளார் தப்பு தப்பாக கூறி மாறிய விஷயங்கள் நிறைய உள்ளது. அவர்களின் மனைவி மார்களை அவர்கள் சந்தேகம் கொண்டார்கள் ஆனால் நாங்கள் சந்தேகம் கொள்ளவில்லை என்று களியக்காவிளையில் வாதிட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மறைவானதை அறிவிக்கவில்லை. என்றெல்லாம் தவறான விஷயங்களை மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்து தான் எதோ அதி மேதாவியை போல எடுத்துக்காட்டினார். சில மட்டி, மடையர், மூடன் கள் இந்த பரமார்த்தகுரு ஜி யை நம்பினார்கள். இதனால் தான் நபிகள் நாயகம் ஸல்... அவர்களை விட தான் உயர்ந்தவர் என்று தன்னை உயர்த்தி கூறினார். இவரை பின் பற்றுபவர்களும் آمنا سلمنا நீங்கள் முன் மொழிந்ததை வழிமொழிந்தோம் என்று கூறினார்கள். நபிகள் ஸல்... அவர்கள் கூறியது தப்பு என்று கூறி, தான் அதை திருத்துவதாக கூறி கொண்டு, பலவீனமான ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி கொண்டிருந்தவர், பலமான ஹதீஸ்களை கூட இந்த கூமுட்டை அறிவுக்கு புரியவில்லை என்பதனால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி அஹ்லுல் குர்'ஆன் என்ற நிலைக்கு வந்தார்.
இப்படி காதியானி கொள்கையை விட மோசமான கொள்கையில் இருந்தவரின் கொள்கையில் இன்னும் ஒரு மாற்றம். அதாவது தான் அல்லாஹ் அளவுக்கு உயர்ந்துள்ளதாக சுன்னத் ஜமாஅத் காரர்கள் நினைக்கின்றார்கள் என்றும், அவர் கொள்கையை ஆதரிக்கும் தளத்தில் உயர்த்த முயற்சிக்கின்றார்கள் என்றும் கூறி முழுமையாக வழிகேடனாக இந்த PJ மாறிவிட்டார் என்று தெரிகின்றது. உண்மையான எந்த ஒரு மூமினின் வாயிலும் இந்த வார்த்தை வரவே வராது. இங்கு வந்து இருக்கின்றது என்றால் பார்த்துக்கொள்ளவும்.
சரி இவரின் கூற்று உண்மையா?
இல்லை. நாம் இமாம்களை பின்பற்றுகின்றோம், அவர்கள் ஆய்வு செய்து மக்களுக்கு ஒரு சட்டம் சொல்லி இருப்பார்கள், அந்த காலத்தில் ஹதீஸ்கள் அச்சடிக்கப்பட்டு இல்லாத நிலை இருந்தது, அதனால் பிறகு அதை விட பலமான ஹதீஸ்கள் கிடைத்த போது சட்டங்களை மாற்றி இருப்பார்கள். இது தான் எதார்த்தமான ஒன்றாக இருந்தது. இதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இவருக்கு ஏன் தவறு வந்தது என்று கேட்கின்றோம். அல்லாஹ் அளவிற்கு இவரை உயர்த்தி கேட்கவில்லை. இவருக்கு வேண்டுமானால் இவருக்கு சிலை வைத்து, அல்லாஹ் அளவிற்கு உயர்த்தி பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கலாம். நாங்கள் அல்லாஹ்வை யார்க்கும் இணையாகக மாட்டோம். நாம் கேட்கும் கேள்விகள் சில.
1. ஆனால் ஆய்வு செய்யவே மார்கத்தில் கூடாது, நேரடியாக தான் மார்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறியவர் ஏன் ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.
2. இமாம்கள் தப்பாக கூறினார்கள் என்று தானே ஒரு வழிகெட்ட ஜமாத்தை ஆரம்பித்தார். பின் ஏன் தப்பாக கூறினார்.
3. உண்மையை சொல்ல தானே போலி தவ்ஹீதை ஆரம்பித்தார். பின் ஏன் முரண்பட்டார்.
4. இமாம்கள் தவறு செய்வதாக அதை கண்டித்து அதை சரி செய்ய முனைந்த இவர் தவறு செய்தால் நியாயமா?
5. இவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் போது இமாம்களும் செய்து இருக்கின்றார்கள் என்று கூறுவது பொருந்துமா?
6. முன் உள்ள ஹதீஸ்களையும், பின் உள்ள ஹதீஸ்களையும் பார்க்காதவர் ஆய்வு செய்ய தகுதி உள்ளவரா?
7. எந்த ஹதீஸ் சஹீஹ், எது ளயீப் என்று சட்டம் சொல்வதற்கு முன் கண்டு பிடிக்க முடியாதவர் ஆய்வு செய்யலாமா?
8. இமாம்களை குறை கண்டவர், தன்னை இமாம்களோடு ஒப்பிடலாமா?
9. இமாம் அபூ ஹனிபா ரஹ்... அவர்களும் மாறி சட்டம் கூறினார்கள் என்று கூறியவர் எப்பிடி மாறி சட்டம் சொல்லலாம்.
10. குர்'ஆன், ஹதீஸை தான் பின் பற்ற வேண்டும் என்று கூறியவர், தொடை விஷயமாக மாலிக் இமாமை (அவர்களும் தொடை மறைக்க தான் சொன்னார்கள் என்பது தான் உண்மை) ஆதாரமாக்கலாமா?
11. இமாம்களை குற்றம் குறை கண்டு பிடித்தவர் இமாமை ஆதாரமாக்கலாமா?
12. அப்படி ஆதாரம் ஆக்குபவர் இமாமாக இல்லாமல் முகல்லிது ஆக மாறி விட்டது என்று தெரியவில்லையா?
13. இவர் ஆய்வு செய்யும் தகுதி இல்லை தானே?
14. எந்த விவாதத்தை எடுத்தாலும் காழி இயாழ் கூறினார், இப்னு குதைபா கூறினார், மாலிக் இமாம் கூறினார், அஹ்மத் இமாம் கூறினார், ஷாபி இமாம் கூறினார் என்று சொல்பவர் குர்'ஆன் ஹதீஸ் படி தான் வாழ்பவரா? இல்லை இமாம்களை பின் பற்றுபவரா?
15. இவரை தப்பு காண கூடாது என்று குர்'ஆனிலோ ஹதீஸிலோ இருக்கின்றதா?
16. தீய மனிதர் ஒரு விஷயத்தை சொன்னால் அதை ஏற்பதற்கு முன் சரி காண வேண்டும் என்ற வசனத்தை ஹதீஸ் கலையில் கூறிய இவருக்கு இந்த விஷயம் பொருந்தாதா?
17. இப்படி கூறினால் அல்லாஹ் இடத்தில் வைக்கின்றோம் என்று அர்த்தமா?
18. தப்பே செய்ய கூடாது என்று கூறியவர்கள், தலை முதல் கால் வரை தப்பாக இருப்பதை எடுத்துக்காட்டுவது குற்றமா?
19. இமாம்கள் தப்பு செய்துள்ளார்கள் என்று நீங்கள் சொன்னீர்களே, அவர்கள் தப்பு சொல்ல கூடாது என்று தானே கூறினீர்கள், அப்போது அவர்கள் மனிதர்கள் இல்லையா? அல்லாஹ்வாக நினைத்தீர்களா? தப்பு சொல்லாதவன் அல்லாஹ் அதனால் இமாம்கள் எப்பிடி தப்பு சொன்னார்கள் என்று தான் கேட்டீர்களா?
20. உங்களுடைய தவறான கருத்துக்களை (தப்பு சொல்லாதவன் எல்லாம் அல்லாஹ், இமாம்களை அப்படி தான் நினைத்தோம், அது மாற்றமாகி விட்டது, நான் தப்பு சொல்லாமல் என்னை அல்லாஹ் வாக்க முனைகின்றார்கள்) கூறலாமா?
21. அப்படி என்றால், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் பொன்மொழி, பேசினால் பொய் பேசுவது முனாபிக்கின் தன்மை என்று கூறுவதின் அர்த்தம் என்ன? (நம்ம தான் ஹதீஸை எடுக்க மாட்டோமே நீ வேற என்னயா?)
22. அது எல்லா பேச்சுக்குமா பொருந்தும்? ஒரு விஷயத்தில் பேசினாலே பொருந்த தானே செய்யும்!
23. மனிதன் என்னும் முறையில் மேலோட்டமாக ஹதீஸ் கிதாபை படிப்பவர் ஆய்வுக்கு லாயக்கா?
24. இவர் சட்டம் சொல்ல மாட்டேன் என்று தானே இந்த ஜமாத்தை உருவாக்கினார், பின் ஏன் முன்னுக்கு பின் முரண் ஆனார்?
25. மக்கள் இவர் சட்டம் சொல்லி தான் கேட்க வேண்டும் என்று ஏன் நிற்பந்திக்கின்றார்.
26. ஜமாலி அவர்கள் விவாதத்தில் PJ வான நீங்கள் விளக்குங்கள் நான் உங்கள் மக்களிடம் கேள்வி கேட்கின்றேன் (உங்களோடு தோல் கொடுத்துக்கொண்டிருக்கும் ஆலிம்களையும் சேர்த்து) என்று சொன்ன போது, அவர்களுக்கு விளங்காது நான் தான் சட்டம் சொல்ல வேண்டும் என்று ஒப்புதல் வாக்குமூலம் எப்பிடி கூறினீர்கள்?
27. ஆக மத்'ஹப் வழியில், எதோ ஒரு இமாமை மனதில் வைத்து நீங்கள் அவரை பின் பற்றி, மக்களுக்கு நீங்கள் இமாமாக சட்டம் கூறி கொண்டிருக்கின்றீர்களா?
28. ஹதீஸ் கிரந்தங்கள் அச்சடிப்பட்டு இருந்தாலும், அதை CD க்களில் மாற்றி இருந்தாலும், எனக்கு ஜகாத் தேவை என்றால் ஒரு சட்டம். நான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால் ஒரு சட்டம். தவறை சரி என்று கூறுவேன், சரியை தவறு என்று கூறுவேன். எல்லா ஹதீஸ்களும் என்னுடைய மனோ இச்சையின் விளையாட்டு மைதானம் என்று கூறுகின்றீர்களா?
29 . ஹதீஸ் கிரந்தங்கள் அச்சடிப்பட்டு இருந்து, அதை இவர் கூறி, அதில் தவறாக சட்டம் சொல்கின்றீர் என்று சுட்டி காட்டும் போதும் தவறு செய்பவர் என் குருட்டுக்கண்ணுக்கு தெரியவில்லை என்று எப்பிடி கூறலாம்?
30 . அச்சடிக்கப்பட்ட நூலை ஆய்வு செய்ய கிளம்பியவர் அதை நான் மேலோட்டமாக தான் பார்த்தேன் என்று கூறுவது நியாயமா?
31. மேலோட்டமாக பார்த்து தவறான சட்டங்கள் வகுத்து தருபவருக்கு ஆய்வு தகுதி இருக்கின்றதா?
என்பது மேல இவர் பேசிய சிறு உரையின் சாராம்சத்திலிருந்து எழும் வினாக்கள் ஆகும். இதை மக்கள் மன்றம் ஒழுங்காக புரிந்தாலே, வழிகெட்ட மக்கள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்.
இப்படி கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு இவரை தாழ்ந்த நிலையில் வைத்து இருக்கும் இவரை அல்லாஹ் அளவிற்கு உயர்த்துகின்றோம் என்று இட்டுக்கட்டி ஆசைப்பட்டு, பிச்சைக்காரனுக்கு அல்லாஹ் என்று களியக்காவிளையில் பட்டம் கொடுத்த இவர், தற்போது இவரையும் கூற வேண்டும் என்ற நப்பாசையில் வந்ததால் நிராகரிப்பின் உச்சத்தில் இருக்கின்றார் என்பதை அறிவித்துக்கொள்கின்றோம்.